அதிராம்பட்டினம், மார்ச் 21
அதிராம்பட்டினம் வழியாக தாம்பரம் ~ செங்கோட்டை இடையே இரு மார்க்கத்திலும் வாரத்தில் 3 நாட்கள் அதிவிரைவு ரயில் சேவையை இயக்குவதற்கு தென்னக ரயில்வே முன்மொழிந்துள்ளதால் இதன் கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரில் பிப், 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடந்த ரயில்வே நேர அட்டவணை ஒருங்கிணைப்பு (ஐஆர்டிடிசி) கூட்டத்தில் தென்னக ரயில்வே தலைமை இயந்திர பொறியாளர் ஆர். செந்தில் குமார் அளித்துள்ள முன்மொழிவில் கூறியிருப்பது;
தாம்பரம் ~ செங்கோட்டை இடையே இரு மார்க்கத்திலும், மணிக்கு 55.24 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 750.29 கிலோ மீட்டர் தூரத்தில், அதிவிரைவு இரவு நேர ரயில் சேவை இயக்குவது என்பதாகவும், வாரதொரும் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய 3 தினங்கள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மாயாவரம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்றடையும், மறுமார்க்கத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய 3 தினங்கள் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் ரயில் நிலையத்திற்கு காலை 7.35 மணிக்கு வந்தடையும் என்றும், இந்த ரயிலில், GSLR (General Sitting Cum Luggage Rake) -1, GSLRD (General Sitting Cum Luggage Rake cum Disabled Coach) - 1, WGFACCW (Self Gen. 1st AC + 2-tier AC) -1, WGACCN (Self Generating AC 3 Tier coach) -3, WGSCN (Slef Generating 3 Tier Sleeper coach) - 9, GS (General Seat II Class Coach) - 2 மற்றும் 17 Bogies ஆகியவை இடம்பெறும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, இதன் கால அட்டவணை தென்னக ரயில்வே சார்பில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திருவாரூர் ~ காரைக்குடி இடையே உள்ள தில்லைவிளாகம், அதிராம்பட்டினம், பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய ரயில் நிலையங்கள் 'B' கிரேடு தரத்தை பெற்றிருப்பதாலும், ரயில்வே துறைக்கு அதிக வருவாய் ஈட்டுத்தரக்கூடிய பகுதிகள் என்பதாலும், இந்த வழித்தடத்தில் தாம்பரம் ~ செங்கோட்டை வரை செல்லும் அதிவிரைவு ரயில் இந்த ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்பதே பெரும்பாலான ரயில் பயணிகள், மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதிராம்பட்டினம் வழியாக தாம்பரம் ~ செங்கோட்டை இடையே இரு மார்க்கத்திலும் வாரத்தில் 3 நாட்கள் அதிவிரைவு ரயில் சேவையை இயக்குவதற்கு தென்னக ரயில்வே முன்மொழிந்துள்ளதால் இதன் கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரில் பிப், 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடந்த ரயில்வே நேர அட்டவணை ஒருங்கிணைப்பு (ஐஆர்டிடிசி) கூட்டத்தில் தென்னக ரயில்வே தலைமை இயந்திர பொறியாளர் ஆர். செந்தில் குமார் அளித்துள்ள முன்மொழிவில் கூறியிருப்பது;
தாம்பரம் ~ செங்கோட்டை இடையே இரு மார்க்கத்திலும், மணிக்கு 55.24 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 750.29 கிலோ மீட்டர் தூரத்தில், அதிவிரைவு இரவு நேர ரயில் சேவை இயக்குவது என்பதாகவும், வாரதொரும் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய 3 தினங்கள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மாயாவரம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்றடையும், மறுமார்க்கத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய 3 தினங்கள் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் ரயில் நிலையத்திற்கு காலை 7.35 மணிக்கு வந்தடையும் என்றும், இந்த ரயிலில், GSLR (General Sitting Cum Luggage Rake) -1, GSLRD (General Sitting Cum Luggage Rake cum Disabled Coach) - 1, WGFACCW (Self Gen. 1st AC + 2-tier AC) -1, WGACCN (Self Generating AC 3 Tier coach) -3, WGSCN (Slef Generating 3 Tier Sleeper coach) - 9, GS (General Seat II Class Coach) - 2 மற்றும் 17 Bogies ஆகியவை இடம்பெறும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, இதன் கால அட்டவணை தென்னக ரயில்வே சார்பில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திருவாரூர் ~ காரைக்குடி இடையே உள்ள தில்லைவிளாகம், அதிராம்பட்டினம், பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய ரயில் நிலையங்கள் 'B' கிரேடு தரத்தை பெற்றிருப்பதாலும், ரயில்வே துறைக்கு அதிக வருவாய் ஈட்டுத்தரக்கூடிய பகுதிகள் என்பதாலும், இந்த வழித்தடத்தில் தாம்பரம் ~ செங்கோட்டை வரை செல்லும் அதிவிரைவு ரயில் இந்த ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்பதே பெரும்பாலான ரயில் பயணிகள், மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.