.

Pages

Sunday, May 12, 2013

அதிரை கால்பந்தாட்ட வீரர்களுக்கு அன்வர் அவர்களின் சிறப்பு பயிற்சி !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டியின் முதல் ஆட்டம் கடந்த [ 10-05-0213 ] முதல் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தந்த கால்பந்தாட்ட வீரர்கள் பலர் போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.






அதன் தொடர்ச்சியாக அதிரையர்களும் இந்தப் போட்டிகளில் பங்குபெற்று தங்களின் தனித்திறமையை நிருபித்து வருகின்றனர். இதற்காக  அதிரை கால்பந்தாட்ட வீரர்களுக்கு தினமும் அதிகாலை வேளையில் பயிற்சியை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அதிக தன்னம்பிக்கையையும் வளர்த்து வருகின்றார் கால்பந்தாட்ட வீரரும், பல சாதனைகளை நிகழ்த்தி நமதூருக்கு பெருமை சேர்த்து தந்த அன்வர் அவர்கள்.

இன்று நடைபெற உள்ள கால்பந்தாட்ட போட்டியில் பிரபல தஞ்சை [ அருள் ] அணியினரும் , மேலநத்தம் அணியினரும் மோதவுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

நன்றி : சமியுல்லா, இத்ரீஸ்

4 comments:

  1. தகவல் பதிவில் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. அன்வர் காக்காவுடன் கால்பந்தாட்டம் ஆடியதை நினைத்து இப்போது பெருமைபடிகிரறேன்.... வாழ்த்துக்கள்

    ReplyDelete

  3. தகவல்களை உடனுக்குடன் பதிந்து வரும் அதிரை நியூஸ் வலைத்தளத்திற்கு நன்றி.

    இப்படிக்கு

    அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேசன் ( AFFA )

    ReplyDelete
  4. பயற்ச்சி அளிக்கும் எங்கள் அன்வர் காக்கா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.