பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை இந்த பகுதியின் வார்டு உறுப்பினர் முஹம்மது ஷரிப் அவர்கள் மூலம் அதிரை பேரூராட்சியின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து விலாரிக்காடு பகுதியிலிருந்து நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ரூபாய் நான்கு இலட்சம் செலவில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளத்தில் பைப் லைன் போடப்பட்டன.
இந்தப் பணிகளின் செய்தியை முதன் முறையாக கடந்த [ 23-04-2013 ] அன்றே தளத்தில் வெளியிட்டோம்.
JCB இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போதே இந்த பகுதிகளில் புதைத்திருந்த தொலைத்தொடர்பு கேபிள்கள் சில துண்டிக்கப்பட்டது. இதனால் இந்தப் பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு இருந்தன.
இதைத் தொடர்ந்து புதிதாக புதைக்கப்பட்ட பைப் லைன் மூலம் இன்று அதிகாலை முதல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டன. அப்போது சிஎம்பி லேன் பிராதான சாலையில் புதைக்கப்பட்டிருந்த குழாய்கள் உடைந்ததால் தெருவெங்கும் வெள்ளம போல் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதுகுறித்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில்...
'தரமற்ற குழாய்கள் புதைக்கப்படும் போதே நாங்கள் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்றோம். ஆனால் யாரும் பொருட்படுத்த வில்லை. குழாய்கள் உடைந்து தெருவெங்கும் வெள்ளம போல் குடிநீர் பெருக்கெடுத்து ஓடுவது எங்களுக்கு அதிர்சியளிக்கின்றது. குடிநீர் பற்றாக்குறையான இந்த் வெயில் காலத்தில் குடிநீர் வீண் விரையம் ஆவது வேதனைத் தருவதாக உள்ளது' என்றனர்.
இதுகுறித்து அதிரை பேரூராட்சியின் 14 வது வார்டு உறுப்பினர் முஹம்மது ஷரிப் அவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு அவரின் கருத்தைப் பெற்றோம்...
இதன் அருகே மற்றொரு நேரடி பைப் லைன் செல்வதாகவும், இதில் எந்த பைப் லைன் உடைந்துள்ளது என்று நேரில் சென்று பார்வையிட்டு அவற்றை உடன் நிவர்த்தி செய்வதாகக் குறிப்பிட்டார்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇது தனியார் சம்பந்தப்பட்டது அல்ல, அரசு சம்பத்தப்பட்டது, முறைப்படி பட்டியல் இட்டு, எப்படி செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்து பின் வேலையை ஆரம்பித்து இருந்தால் ஒரு பிரச்சனையும் இன்றி எல்லாம் சுமூகமாக இருந்திருக்கும்.
ஜே.சி.பி மிஷின் உபயோகப் படுத்த வேண்டிய இடத்தில் ஜே.சி,பி மிஷினும், கைகொண்டு உபயோகப் படுத்த வேண்டிய இடத்தில் கைகொண்டும் வேலையை செய்துருந்தால் அந்த தொலைபேசி கேபிள்கள் கூட பாதிப்பு அடைந்து இருக்காது.
அன்று வேலை நடக்கும் நேரத்தில் நான் நேரில் சென்று பார்த்தேன்.
ஒரு பக்கம் குடிநீர் வாரியம், மறுபக்கம் தொலை தொடர்பு வாரியம்.
சண்டை எப்படி இருந்தது தெரியுமா?
ஒரு அடி தூரிக்கு அடுத்த வீடுகள் சண்டை போட்டுக் கொண்டது போல் இருந்தது.
போடப்பட்ட குழாய்கள் தரமற்றது, நீண்ட நாட்கள் உழைக்காது.
அப்பகுதி மக்களுக்கு தடை இல்லாமல் குடி நீர் வழங்க விரும்பினால், தரமுள்ள குழாய்களை நிலத்தின் ஏற்ற தாழ்வுக்கேற்ப முறையாக அமைத்து கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
ஆகா மொத்தத்தில் நடந்துள்ள பணி மிகவும் தரமற்றது.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
இத்தனை நாளாக முயற்ச்சித்து போடப்பட்ட இந்த தண்ணீர் குழாயை தரமானதாக போட்டிருந்தால் இப்படி தண்ணீரும் வீணாகாது. நாள்ப்படவும் கேடாகாமல் இருக்கும். மீண்டும் செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஏன் இதை யோசிப்பதில்லை..?
ReplyDeleteபதிலை பொறுப்பானவர்கள் சொல்வார்களா..?
இதுமட்டும் அல்ல பேரூராட்சி நிர்வாகம் ஏலம் விடும்பொழுது ஒறே நபருக்கு கொடுக்க கூடாது.
ReplyDeleteஎங்கள் தெருவில் JCP-யை வைத்து பள்ளம் நோன்டினப்பொழுது முதலில் தட்டிக்கேட்டவர் நம்ம சேக் அலி காக்கா அவர்கள், பிறகு அந்த கான்ராக்டர் ஹஜாநகரைச் சேர்ந்த சுல்தான் (நம்ம பேரூராட்சிக்கு இவரைவிட்டா வேர ஆள்ளில்லை) எதையும் பொருப்படுத்தாமல் தட்டிக்கேட்ட என்னையும் "வாரியா அடித்துப்பாத்துக்காளாம் என்று சொன்னார். எங்கள் தெரு பெண்கள் அனைவரும் அவரிடம் சண்டை செய்தன்ர் காரனம் ஒன்று எங்கள் தெருவுக்கு வரும் குடிநீர் குழாயை உடைத்தது அதனால் இரண்டு நாட்கள் மண்னோடு கழந்து குடிநீர் வீடுகளுக்கு வந்தது மற்றொன்று எங்கள் தெருவில் அவரவர்கள் சொந்த செலவில் கட்டிய சாக்கடைக் காழ்வாய்கள். இதை ரொம்ப ஈசியா ஒடைத்து தழ்ழிவிட்டுப்போய்க்கொன்டே யிருந்தார், அந்த ஹஜாநகரைச் சேர்ந்த சுல்தான்.
எந்த வேலையாக இருதாளும் முதலில் செய்யும்போது யோசித்து செய்தால் மறுபடியும் செய்வேண்டிய தேவையில்லை.தண்ணீரை வீண் விரயம் செய்யவேண்டாம்.மீண்டும் செய்யும்போது தரமான பைப்புகளும் தரமான ஊளியர்களும் வைத்து செய்தால் நன்றாக இருக்கும்.
ReplyDelete