.

Pages

Thursday, May 2, 2013

காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய கழகத்தின் ஆண்டு விழா !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று [ 02-05-2013 ] காலை 10.30 மணியளவில் கல்லூரியின் கலையரங்கத்தில் ஆங்கில இலக்கிய கழகத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


நிகழ்ச்சியின் நிரல் :

1. ஆங்கிலத்துறையின் தலைவர் முனைவர் A. முகம்மது முகைதீன் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

2. ஆங்கிலத்துறை சார்பில் கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடப்பட்டு ஆண்டரிக்கையாக தொகுத்து வழங்கினார் ஆங்கிலத்துறை பேராசிரியை திருமதி MA. தஸ்லீமா அவர்கள்.

3. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் AM. உதுமான் முகைதீன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.

4. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவி முனைவர் R. கலாமணி அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

5. ஆங்கிலப் பிரிவைச் சார்ந்த கல்லூரியின் மாணவ மாணவியர் பல்வேறு தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தினார்கள்.

6. நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் முனைவர் M. சிக்கந்தர் பாஷா அவர்களால் நன்றியுரை வாசிக்கப்பட்டது.

7. நிகழ்ச்சிகள் அனைத்தும் உதவி பேராசிரியை  E. பிளோமினா அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.