.

Pages

Thursday, July 11, 2013

அதிரை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மீன் !

அதிரையை அடுத்து கொள்ளுக்காடு எனும் கடற்க்கரை கிராமத்தில் காலை நேரத்தில் கடலில் பிடித்து வரப்படுகிற மீன், இறால், நண்டு ஆகிய கடல் உணவுப்பொருட்கள் விலை சற்றுக்குறைவாகவும்,  ஃபிரஷ்ஷாகவும் கிடைப்பதால் நமதூர்வாசிகள் சிலர் அங்கு சென்று வாங்குவதுண்டு. அப்படி மீன் வாங்கச்சென்ற நமதூர் இளைஞர் ஒருவர் கண்ணில் எதார்த்தமாக தென்பட்டு இருக்கிறது  இந்த அதிசய மீன். செத்துக்கிடந்த நிலையில் கடற்கரை ஓரத்தில் சிரித்த முகத்துடன் கிடந்த இம்மீனை அவரது செல்போன் சுட்ட புகைப்படம் தான் இது.

தலையில் சிறிய கொம்புடன் மனிதனின் தாடையுடன் சேர்ந்த பல்லின் அமைப்பைப்போலவும், மற்ற பிற தரைவாழ் விலங்கினங்களைப் போலவும் பல கோணத்தில் காட்சி தரும் இந்த மீன் எந்தவகையைச் சார்ந்தவை என்று தெரியவில்லை

இறைவனின் படைப்பினங்களில் இதுவும் ஒரு அதிசயமே.!


2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. மனித பற்களை உடைய இந்த மீன் பார்ப்பதற்கு ஒரு அதிசயமாக அல்லவா இருக்கிறது.


    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.