.

Pages

Friday, July 5, 2013

புதிதாக பொறுப்பேற்ற தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் அதிரைக்கு வருகை ! அதிரையின் பல்வேறு அமைப்பினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர் !

கடந்த [ 24-05-2013 ] அன்று தமிழகம் முழுவதும் 34 போலீஸ் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிறப்பித்து இருந்தார்.
அதன் படி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இருந்த அன்பு அவர்கள் சென்னை சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டாகவும், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஜி.தர்மராஜன் அவர்கள் பதவி உயர்வு பெற்று, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் நியமிக்கப்பட்டனர்.

பதவி உயர்வு பெற்றபின் முதல் முறையாக  இன்று [ 04-07-2013 ] மாலை 7 மணியளவில் அதிரை காவல் நிலையத்திற்கு வருகை புரிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.தர்மராஜன் அவர்களை அதிரை ப் பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம் , தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் நிர்வாகிகள் அன்வர் அலி, பீர் முஹம்மது, ஹாஜி ஆகியோரும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் Z. முஹம்மது இலியாஸ் அவர்களின் தலைமையில் அக்கட்சியின் அதிரை நகர நிர்வாகிகள் முஹம்மது, சம்சுல் ரஹ்மான், சலீம், தெளஃபிக் ஆகியோரும், அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் அஹமது, லியோ சங்கம் மண்டலத் தலைவர் நியாஸ் அஹமது மற்றும் முஹம்மது இஸ்மாயில், அதிரை வர்த்தக சங்க நிர்வாகியும், மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் V.T. தஹளா மரைக்காயர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து தங்களின் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்.

சந்திப்பின் போது பட்டுக்கோட்டை டிஎஸ் பி வெங்கடேசன், அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் , ராஜ்கமல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






4 comments:

  1. பதிவிர்க்கு நன்றி

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. செய்தி பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.

    தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக
    பதவி உயர்வு பெற்று வந்திருக்கும் திரு ஜி.தர்மராஜன் அவர்களின் பணி சிறந்து விளங்கி நற்ப்பெயருடன் திகழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.