.

Pages

Wednesday, July 31, 2013

அதிரை அருகே தூக்கி வீசப்பட்ட பிறந்த சில மணி நேரமே ஆன இரட்டை குழந்தைகள் மீட்பு !

அதிரை கருங்குளம் நசுவினி ஆற்றின் மேற்கரையின் வழியே கருங்குளத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் இன்று [ 31-07-2013 ] அதிகாலை சென்றபோது பெரிய பாலித்தீன் பையொன்று கிடப்பதை அங்கு பார்க்கிறார்.  அதில் என்ன இருக்கிறது என்பதற்காக திறந்து பார்த்த போது பெட்சீட்டால் சுற்றிய நிலையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண், பெண் என இரு குழந்தைகள் தொப்புள்கொடியுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.



பெட் சீட்டால் இறுக்கமாக மடித்து காணப்பட்ட இரு குழந்தைகளும் உயிர்க்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்தவுடன் அதிரை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கிறார்.  காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துவிட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழந்தையை கைப்பற்றிய 108 மருத்துவ செவிலியர்கள் முதலுதவி செய்துவிட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். ஆண்குழந்தை ஒரு கிலோ 200 கிராம் எடையும், பெண் குழந்தை ஒரு கிலோ 250 கிராம் எடையும் இருந்தன.

இதுகுறித்து அதிரை காவல்துறையினர் மேலும் விசாரித்து வருகின்றனர். இதனால் இந்தப்பகுதி முழுவதும் பரப்பரப்பாக காணப்பட்டன. மேலும் சில அடி தூரத்தில்தான் சேதுபெருவழிச் சாலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. சில நிமிடங்கள் கிடைக்கும் உடல் சுகத்திற்காக இரு பிஞ்சு உயிர்களை கொலை செய்ய முற்படுவது கண்டிக்கதக்கது.

    யார் இந்த மாபாதக செயலை செய்தது என காவல்துறை விரைவாக கண்டுபிடித்து மீடியா முன்பு பகிரங்கபபடுத்த வேண்டும். மேலும் அதிகபட்ச தண்டனையும் வாங்கிகொடுக்க முன்வர வேண்டும்.

    ReplyDelete
  2. இத்தகவலை உலகறியச்செய்த அதிரை நியூஸிற்கு முதலில் நன்றி.

    கொஞ்சம் கூட மனசாட்சி,மனிதாபிமானம் இல்லாமல் தான் பெற்ற பச்சிளம் குழந்தையை தூக்கி வீசிவிட்டுச்சென்றிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது யாரென்று காவல்துறையினர் கண்டு பிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும்.

    ReplyDelete
  3. தொட்டில் குழந்தை ..போன்ற திட்டம் இருக்கின்ற

    போது ..ஏன் இப்படி உயிரை பரிதவிக்க விட

    வேண்டும்...கள்ள காதல் போன்ற தகாத உறவு மூலம்

    உருவாகும் சிசுவின் நிலை இது போன்று நிகழ

    காண்கிறோம் ..இது போன்ற குற்றங்களை செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க
    வேண்டும்

    ReplyDelete
  4. கொஞ்சம் கூட மனசாட்சி,மனிதாபிமானம் இல்லாமல் தான் பெற்ற பச்சிளம் குழந்தையை தூக்கி வீசிவிட்டுச்சென்றிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது யாரென்று காவல்துறையினர் கண்டு பிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும்.

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    குழந்தை பிறந்த செய்தி கேட்டு சந்தோஷப்படும் இந்த மானிடம், இப்போ துன்பத்தில் ஆழ்ந்து விட்டது.

    குழந்தை இல்லைஎன்று தவம் கிடப்போர் ஒருபக்கம், முறைகேடான முறையில் குழந்தையை பெற்று தூக்கி வீசுவோர் மறுபக்கம். இந்த இரண்டு பக்கத்தையும் எப்படி சரிசெய்வது?

    இந்த விஷயத்தில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சிந்திக்க வேண்டும். குழந்தையை பெற்றெடுக்க மட்டும்தான் உரிமையே தவிர, உயிரை எடுக்க அல்ல.

    என்னதான் ஊடகங்கள் செய்திகளை அள்ளி வீசினாலும், பொதுமக்கள் டமார் டிமார் என்று அடிச்சிக்கிட்டாலும், இது மாதிரி தருதல ஜென்மங்கள் திருந்தாவரை இம்மாதிரி சம்பவங்களை நிறுத்த முடியாது.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  6. ஐந்து நிமிட சுகத்திற்காக ஆசை பட்டு இரண்டு பட்சிளம் உயிர்களை பெற்று ஆற்றில் வீசிய அவளை கண்டால் மன்னிக்க வேண்டம் அவளை வெட்டி அதே ஆற்றில் வீசி எரிங்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.