1. தங்களைப்பற்றி...
2. தங்களிடம் கல்வி கற்ற அன்றைய மாணவர்கள் - இன்றைய மாணவர்கள் வித்தியாசம் கூறுக...
3. பெற்றோர் - ஆசிரியர் - மாணாக்கர் ஆகியோருக்கு கூறும் அறிவுரை...
ஆகிய கேள்விகளை முன்வைத்து அதிரை நியூஸின் நேர்காணலுக்காக அதிரை காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் ஹாஜி. N.M. முஹம்மது ஹனிபா அவர்களை அருமையானப் பொழுதில் அவர்களின் இல்லத்தில் சந்தித்து கருத்தைப்பெற்றோம்.
ஹாஜி N.M. முஹம்மது ஹனிபா அவர்களைப்பற்றிய சிறுகுறிப்பு :
கடந்த 1961-63 ஆம் ஆண்டில் ஆசிரியப் பயிற்சியை முடித்தவுடன் தான் பிறந்த ஊரில் உள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து பின்னர் உதவித் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்து பின்னர் 1999 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றவர்.
தற்போது நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தில் பொறுப்பில் இருக்கும் இவர் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பாக 'பள்ளிக்கல்வி புரவலர் பட்டயத்தை' அன்றைய கல்வி அமைச்சரிடம் பெற்றவர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஜனாப் ஹனிபா சார் அவர்களை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நாங்களெல்லாம் அவரிடம் படித்த பழைய மாணவன் என்ற பெருமை உண்டு.
அவர்களோடு மாணவனாக இருந்த காலங்களை மறக்க முடியாது. காரணம் எங்கள் மாணவப் பருவம் அறுசுவை கலந்ததாக இருந்தது. அன்றைய ஆசிரியர்மார்களும் அறுசுவை கலந்ததோடு எங்களை நடத்துவார்கள். இதுதான் எல்லா நிலையிலும் எங்களை வெற்றி அடையச் செய்தது.
சார் உங்களின் கருத்து மிகவும் அருமையாக இருக்கின்றது, நான் உங்களிடம் படித்த மாணவன் என்ற அடிப்படையில் இன்றும் உங்களை பாராட்டுகின்றேன் வாழ்த்துகின்றேன்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அவ்வப்போது உங்களை சந்திக்க நேரிட்டாலும் கேமிரா முன்பு நீங்கள் தோன்றியது இதுதான் முதல் தடவை என நினைக்கிறேன்.
ReplyDeleteஹனிபா ஸார் எடுத்த கணக்குப் பாடத்தை மறக்க முடியுமா ? அருமையாக விளக்கக்கூடியவர்.
உங்களின் ஓய்வு காலம் நல்லவையாக அமைய இறைவனிடம் பிராத்திக்கிறேன் ஸார்
உங்கள் முன்னாள் மாணவன்,
சேக்கனா நிஜாம்
நலமா சார்
ReplyDeleteசாரை பார்த்து ரொம்ப நாளாச்சு. பாடம் எடுக்கும் பொழுது Because ன்னு அடிகடி சொல்லுவிங்களே அதே மறக்கவே முடியாதுங்க
மதிப்பிற்குரிய ஹனிபா சார் அவர்களை மறக்க முடியாது. அவர்கள் பணியில் சேர்ந்த புதிதில் முதல் வரிசையில் ஆசிரியரின் இருக்கைக்கு நேரான மாணவர் வரிசையில் இருந்த ஒரு மாணவன் நான். என்னுடைய ஒரு வகுப்புத்தோழர் சார் அவர்களின் மைத்துனர். அவரை நாங்கள் கிண்டல் செய்வோம். உன்னிடம் சார் கேள்வி கேட்கமாட்டார். கேட்டால் உன் ராத்தாவிடம் சொல்லிக் கொடுத்துவிடுவே என்று.
ReplyDeleteஒரு மாணவரை போ நீ போ நீ என்று கோபமாக சொன்னார். துடுக்கான அந்த மாணவர் போனி அல்ல சார் டப்பா என்று சொன்னது இன்னும் சிரிப்பு வருகிறது.
நட்புடன் பழகும் அன்பான இளைய ஹனிபா சாரையே என் நினைவு சேமித்து வைத்து இருக்கிறது. அண்மையில் சந்திக்க இயலவில்லை என்பது ஒரு வருத்தம்.