கடந்த [ 28-12-2012 ] அன்று ஆக்கிரமிப்புகள் தொடர்பாக தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையினரும், கிராம நிர்வாகிகளும் போலீஸாரின் ஒத்துழைப்போடு சாலைகளை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை JCB இயந்திரம் மூலம் அகற்றினர். குறிப்பாக கடைகளுக்கு முன்பு இருந்த கீற்று கொட்டகை, ஆஸ்பெட்டாஸ் சீட்டு, தடுப்பு பலகைகள், விளம்பர போர்டுகள் ஆகியவை அகற்றப்பட்டன. பெரும்பாலான கடைகளின் வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றி நெடுஞ்சாலைத் துறையினருக்கு ஒத்துழைப்பையும் வழங்கினார்கள். அன்றைய தினம் நெடுஞ்சாலைத் துறையினரால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும் தந்தது.
அன்றைய தினம் நெடுஞ்சாலைத் துறையினரிடம் கால அவகாசத்தை பெற்ற ஆக்கிரமிப்பாளர்களின் சிலர் தங்கள் கடைகள் மற்றும் வீடுகளுக்கு முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் காலதாமதப்படுத்தி வந்ததால் நேற்று முன்தினம் அதிரை சேதுபெருவழிச்சாலை பகுதிகளில் PWD அலுவலர்கள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் பெயின்டால் குறியீடும் செய்துவிட்டுச் சென்றுனர். இதனால் ஆக்கிரமிப்பாளர்களின் மத்தியில் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் குறியீடு செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு பகுதிகள் JCP இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்கிரமிப்பு மீண்டும் நடைபெறமால் இருக்க அதிரை பேருந்து நிலையம் அருகில் சேது பெருவழிச்சாலையில் பட்டுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஒரு சில நாள்களிலேயே ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் அதே இடத்தில் கடைகளை விரிப்பதை நிரந்தரமாக தடுக்கும் நோக்கில் காவல்துறை மற்றும் உள்ளாட்சியின் கண்காணிப்பு எப்போதும் இருக்க வேண்டும்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சந்தோஷமான செய்தி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை