.

Pages

Wednesday, July 17, 2013

தக்வாப் பள்ளி மீன் மார்க்கெட்டில் புதிய கட்டிடப் பணிக்காக அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து பணிகள் மும்முரம் !

தக்வாப் பள்ளி மீன் மார்க்கெட்டை விரிவாக்கம் செய்து அதில் புதிய கட்டிடம் ஒன்றை மிகப்பிரமாண்டமாய் ரூபாய் 85 இலட்சம் பொருட்ச்செலவில் 120 கடைகளைக் கொண்ட வளாகம் கட்டி எழுப்புவதென்று அதன் நிர்வாகிகளால் முடிவுசெய்யப்பட்டதை அடுத்து கடந்த [ 17-06-2013 ] அன்று காலை 7 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதில் ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம், ஜாவியா கமிட்டித்தலைவர் இக்பால் ஹாஜியார், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், தர்ஹா பேரவைத் தலைவர் நிஜாம் முஹம்மது, தக்வாப் பள்ளியின் முன்னாள் செயலாளர் உமர் தம்பி, அதிரை பேரூராட்சி உறுப்பினர்கள் ஆகியரோடு தக்வாப் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியரோடு ஊர் முக்கியஸ்தர்களில் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாகவே கட்டுமானப்பணிகள் மும்முரமாக  நடைபெற்று வருகிறது. ஏராளமான கட்டுமான தொழிலார்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்திட்டத்தின் பொறியாளர் அனைத்து பணிகளையும் உடனிருந்து கவனித்து வருகிறார்.




2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. அப்படியே கடைத்தெருவும் புதிய பொலிவு பெற வேண்டும்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.