அரசின் மானிய விலை அரிசியைப் பெறுவதற்காக அதிரையில் உள்ள மொத்தம் 31 பள்ளிவாசல்களுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை வருடம்தோறும் முன்னின்று கவனித்து வரும் பிலால் நகர் மஸ்ஜித்தின் முத்தவல்லி S.M.A. அஹமது கபீர் அவர்களிடம் இதுகுறித்து பேசியவகையில்...
அரசால் நிர்ணயம் செய்துள்ள பச்சரிசியின் விலை கிலோ ஓன்றுக்கு ரூபாய் 1/- வீதம் அரசிற்கு செலுத்தப்பட வேண்டும். மேலும் பச்சரிசியை ஏற்றி வருகிற வாகனங்களுக்குரிய வாடகைத் தொகையினையும் நாமே செலுத்த வேண்டும் என்றார்.
நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு கூடுதலாக அரிசியை வழங்க வேண்டும் என்றும், மேலும் கால தாமதத்தை தவிர்த்து ரமலான் மாத நோன்பு ஆரம்பிக்கும் முன்பே ஒவ்வொரு பள்ளிவாசல்களுக்கும் அரசின் செலவிலேயே வாகனங்கள் மூலம் அரிசியை விநியோகம் செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
அரசு கவனத்தில் கொள்ளுமா !?
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சந்தோஷமான செய்தி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நோன்பு ஆரம்பமாக இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் கூடுதலாக அரிசியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்கூட்டியே அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இருக்கலாம்.
ReplyDeleteமீண்டும் காலம் தாழ்த்தாமல் அரசு உடனே இதை கவனத்தில் எடுத்து செயல்பட அது சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி முறையிடுவது நல்லது.
சாராயத்தில் வருமானம் பெரும் அரசிடம் இருந்து மானியத்தில் புனித ராமளார் இப்தார் உணவுக்கு அரிசி பெறுவது சரியா மற்றும் தரமான அரிசியா எனது கேள்வி சரியா பதிலுக்காக காத்திருக்கிறேன்
ReplyDelete