உடனே களத்தில் இறங்கிய அதிரை நியூஸ் குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாகச் சென்று ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வின் இறுதியில் அந்த சகோதரி குறிப்பிட்டது உண்மைதான் என நிரூபணமாகியது.
கடந்த சில நாட்களாக சோப்பு நுரையுடன் கூடிய கழிவுநீர் குடிநீரில் கலந்து வருவதால் குடிநீரை குடிக்கவே முடிய வில்லை. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் வாய்ப்புள்ளது என்றார்.
இதுகுறித்து இந்தப்பகுதியின் வார்டு உறுப்பினர் சகோதரி ரபீக்கா முஹம்மது சலீம் அவர்களிடம் தொலைபேசியில் பேசிய வகையில்...
நீங்கள் குறிப்பிடும் சகோதரியின் சார்பாக கோரிக்கை பெறப்பட்டுள்ளது. அவர்களின் வீட்டிற்கு செல்லும் குடிநீர் இணைப்பில் மாத்திரம் பிரச்சனை ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக பேரூராட்சியின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. விரைவில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார் நம்பிக்கையுடன்.
சமூகம் நலன் சார்ந்த தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி சம்பந்தப்பட்டோரை [ ஒருவர் வார்டு உறுப்பினரை அணுகியது மற்றொருவர் பேரூராட்சி அலுவலரை அணுகியது ] துணிவுடன் அணுகி நிவர்த்தி செய்ய நினைப்பது. பாராட்டுக்குரியது -வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇதுபோல் அதிரையில் வசிக்கும் பிற சகோதரிகளும் தங்களையும், தங்களை சார்ந்தோரையும் பாதிக்கும் உள்ளாட்சி பிரச்சனைகளை வெளிக்கொணர வேண்டும். இந்த சகோதரிகளை தங்களின் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தொடருங்கள். வெற்றி நிச்சயம் !
குடி நீரில் கழிவு நீர் கலந்து வருவது இது மாபெரும் சுகாதாரக்கேடு. இந்த சுத்தமற்ற குடிநீரை பருகுகிறவர்களுக்கு பல வைரஸ் நோய்கள் தாக்கப்படக்கூடும். இத்தகைய ஆபத்தான குறைபாட்டை உடனே சரி செய்ய பேரூராட்சியின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்ல வேண்டும்.
ReplyDelete