.

Pages

Tuesday, July 30, 2013

குடி­நீரில் கழிவுநீரா !?

அதிரை 17 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சகோதரி ஒருவரிடமிருந்து தொலைபேசி வழியாக குடிநீர் தொடர்பான கோரிக்கை ஒன்று நம்மிடம் வந்தது. அதில் தங்கள் வீட்டிற்கு வரும் குடி­நீரில் கழி­வுநீர் கலந்து வரு­வதாக கவலையுடன் குறிப்பிட்டார்.

உடனே களத்தில் இறங்கிய அதிரை நியூஸ் குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாகச் சென்று ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வின் இறுதியில் அந்த சகோதரி குறிப்பிட்டது உண்மைதான் என நிரூபணமாகியது.

இது­கு­றித்து அந்த சகோதரி நம்மிடம் மேலும் கூறியதாவது :
கடந்த சில நாட்களாக சோப்பு நுரையுடன் கூடிய கழிவுநீர் குடிநீரில் கலந்து வருவதால் குடி­நீரை குடிக்­கவே முடி­ய­ வில்லை. மேலும் துர்­நாற்றமும் வீசு­கி­றது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் வாய்ப்புள்ளது என்றார்.

இதுகுறித்து இந்தப்பகுதியின் வார்டு உறுப்பினர் சகோதரி ரபீக்கா முஹம்மது சலீம் அவர்களிடம் தொலைபேசியில் பேசிய வகையில்...
நீங்கள் குறிப்பிடும் சகோதரியின் சார்பாக கோரிக்கை பெறப்பட்டுள்ளது. அவர்களின் வீட்டிற்கு செல்லும் குடிநீர் இணைப்பில் மாத்திரம் பிரச்சனை ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக பேரூராட்சியின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. விரைவில் துரித நட­வ­டிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார் நம்பிக்கையுடன்.

2 comments:

  1. சமூகம் நலன் சார்ந்த தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி சம்பந்தப்பட்டோரை [ ஒருவர் வார்டு உறுப்பினரை அணுகியது மற்றொருவர் பேரூராட்சி அலுவலரை அணுகியது ] துணிவுடன் அணுகி நிவர்த்தி செய்ய நினைப்பது. பாராட்டுக்குரியது -வாழ்த்துக்கள்...

    இதுபோல் அதிரையில் வசிக்கும் பிற சகோதரிகளும் தங்களையும், தங்களை சார்ந்தோரையும் பாதிக்கும் உள்ளாட்சி பிரச்சனைகளை வெளிக்கொணர வேண்டும். இந்த சகோதரிகளை தங்களின் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தொடருங்கள். வெற்றி நிச்சயம் !

    ReplyDelete
  2. குடி நீரில் கழிவு நீர் கலந்து வருவது இது மாபெரும் சுகாதாரக்கேடு. இந்த சுத்தமற்ற குடிநீரை பருகுகிறவர்களுக்கு பல வைரஸ் நோய்கள் தாக்கப்படக்கூடும். இத்தகைய ஆபத்தான குறைபாட்டை உடனே சரி செய்ய பேரூராட்சியின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்ல வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.