சேது பெருவழிச்சாலையில் அதிரைப் பேரூராட்சி அலுவலத்திற்கு எதிரே செல்லும் பிரதான மின்கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து தொங்கியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து அவ்வழியே செல்லும் வாகனங்களையும் பொதுமக்களையும் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தினர்.
அதன் பிறகு வந்த அதிரை மின்சார வாரிய ஊழியர்கள் அறுந்து தொங்கிய மின்கம்பியை சரிசெய்தனர். இதனால் இப்பகுதி முழுவதும் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டதுடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்பகுதியில் நிகழ இருந்து பெரும் விபத்து துரித நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டது.
நமதூரில் அநேக பகுதிகளில் மின்கம்பி பழுதடைந்த நிலையில் தான் உள்ளது. அதனை மின்வாரியம் கவனத்தில் எடுத்து அனைத்துப்பகுதிகளிலும் சோதித்து மின்கம்பியை மாற்றினால் ரொம்ப புண்ணியமாக இருக்கும்.
ReplyDeleteநமதூரில் அநேக பகுதிகளில் மின்கம்பி பழுதடைந்த நிலையில் தான் உள்ளது. அதனை மின்வாரியம் கவனத்தில் எடுத்து அனைத்துப்பகுதிகளிலும் சோதித்து மின்கம்பியை மாற்றினால் ரொம்ப புண்ணியமாக இருக்கும்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சந்தோஷமான செய்தி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை