.

Pages

Friday, September 27, 2013

அதிரையில் தி.மு.க.நடத்திய திண்டுக்கல் ஐ.லியோனியின் மாபெரும் பட்டிமன்ற விழா.!

இன்று [27/09/2013] வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில்  பேரரிஞர் அண்ணா அவர்களின் 105வது பிறந்த நாள் விழா பட்டிமன்ற நிகழ்ச்சி அதிரை பேரூந்து நிலைய வளாகத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு அதிரை பேரூராட்சித் தலைவர் S.H.அஸ்லம்  தலைமை தாங்கினார்.அதிரை நகர தி.மு.கழக செயலாளர் திரு இராம.குணசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.திரு.S.S. ராஜ்குமார்  அவர்கள் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும் மாவட்ட தி.மு. கழகத் தலைவருமான திரு.S.S.பழனிமாணிக்கம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக பட்டி மன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு  இவ்விழாவை சிறப்பிக்கும் வண்ணம்  தலைவர் கலைஞரின் புகழுக்கு காரணம் அரசியலா.?  இலக்கியமா.? என்ற  தலைப்பில் பட்டிமன்றம் நடத்தினார்.

இவ்விழாவில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட தி.மு.கழக உறுப்பினர்கள்,மற்றும் பெண்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


  










4 comments:

  1. சிஎம்பி லேன் வாய்க்காலுக்கு 'என்ஆர் ரெங்கராஜன் வாய்க்கால்' னு பேர் வைக்கலாமா இல்ல பேரூராட்சி எல்லையில் இருப்பதால் உங்க பேர்தான் வைக்கனுமான்னு சட்டுபுட்டுனு முடிவு பண்ணுங்க. காங்ஆ, திமுகாவா?

    பெயர் சூட்டு விழாவ விமரிசையா, பெரிய்ய்யய்ய விழாவா எடுத்துருவோம் பாஸ்....


    ReplyDelete
  2. கடைசி போட்டோவுல இருக்குற இப்ராகிம் காக்கா லியோனிக்கு கை கொடுத்தாஹலா இல்லையா? கேட்டு சொல்லுங்க பாஸ்...

    இப்ராகிம் காக்காவும் கலந்து கொண்டார்கள்னு எழுதாதற்கு செல்லமாய் கண்டனம்.

    ReplyDelete
  3. வெளியூர் காரவய்ங்க போடுற கண்டகண்ட ஸ்டேடஸ்கெல்லாம் லைக் போடுறாய்ங்க, அசலூர்காரன் நான் போடுற ஸ்டேடஸ் ஒன்றுக்குகூட லைக்க மாட்றாய்ங்க. பஞ்சாயத்து தலைவர்ட்ட சொல்லி சங்கத்த கூட்ட சொல்லுங்க.

    ReplyDelete
  4. Leyone adirai varukai d.m.k. Mendum mendum puththuer petru ullathu

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.