.

Pages

Wednesday, September 11, 2013

செவ்வாய் கிரகத்திற்க்கு செல்ல துடிக்கும் 20,000 இந்தியர்கள்.!



சிகப்பு கிரகமென அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழி பயணமாக செல்ல 20,000 இந்தியர்கள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.

மார்ஸ் ஒன் என்னும் அமைப்பு வருகிற 2023 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழிப்பயணமாக செல்ல விருப்பமுடையவர்கள் தங்களின் இணையதளத்தில் பதிவு செய்துக்கொள்ளலாமென அறிவித்திருந்தது.

பூமியிலிருந்து வேறொரு கிரகத்திற்கு செல்ல மக்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள என கேள்வி எழுந்தப்போதும் கூட, 140 நாடுகளிலிருந்து சுமார் 2,00,000 லட்சம் மக்கள் ஒரேடியாக பூமியை விட்டு செவ்வாயில் தங்களின் மீதி வாழ்வை வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதில் ஆச்சரியமூட்டும் விதமாக 140 நாடுகளில் அதிக மக்கள் செவ்வாய்க்கு செல்ல விருப்பம் தெரிவித்த நாடுகளில் இரண்டாவது இடத்தை பிடித்தது இந்தியா.

அமெரிக்காவிலிருந்து 47,000 மக்களும் ,இந்தியாவிலிருந்து 20,000 மக்களும், சீனாவிலிருந்து 13,000 மக்களும் பூமியை விட்டு செவ்வாயில் குடியேற ஆவலாக உள்ளனர்.

2015 ஆம் ஆண்டிற்குள் செவ்வாயில் குடியேற விண்ணப்பித்தவர்களிலிருந்து 40 பேரை தேர்வு செய்து, அவர்களை 4 பேர் அடங்கிய 10 குழுக்களாக பிரித்து தீவிரமான பயிற்சி அளிக்க மார்ஸ் ஒன் திட்டமிட்டுள்ளது. இக்குழுக்களில் ஒரு குழு தேர்வு செய்யப்பட்டவர்கள் 2023 ஆம் ஆண்டு முதன்முறையாக செவ்வாய்க்கு பயணம் மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.

இக்குழுவினர் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை சென்றடைய சுமார் 7 மாதங்கள் ஆகுமென்பது குறிப்பிடத்தக்கது.


THANKS WEB DUNIA

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.