அடுத்து 10வது பரிச்சையின் முடிவு மறுநாள் காலையில் வரும் தின பத்திரிக்கைகளுக்கு காத்திருக்க வேண்டும் மெயின் ரோட்டுக்கு போய் [ சுபுஹு தொழுதுவிட்டு ] காத்திருப்போம் மணி 6.30 or 7.00 ஆகிவிடும் பத்திரிக்கை கையில் கிடைக்க பொடிப்பொடி எழுத்துக்களை 10 பேர் மொத்தமாய் ஒரே பேப்பருக்குள் தலையை நுழைத்து ஆவலாய் தேடுவோம் [கரக்கடப்பள்ளி,காட்டுப்பள்ளி,பாவாக்களுக்கு ஒன்னைகால்ரூவா நேத்திக்கடன் நிய்யத்தோடு]ஹ ஹ் ஹா
நமதூரில் அரசு அலுவலகம், வியாபார ஸ்தலங்கள் உள்ளூர் வியாபாரிகளின் இல்லம் விரல் விட்டு எண்ணிவிடும் எண்ணிக்கையில் தான் போன் வசதிகள் இருக்கும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி ஆமைக்கு ஹெட்போன் மாட்டியதுபோல் கருப்பாய் மரமேஜை மீது கம்பீரமாய் வீற்றிருக்கும் ரிசிவரை எடுத்தால் உடனே என்ன நம்பர் சார் என்பார் exchange ஊழியர் நாம் யாருக்கு போன் செய்ய நினைத்தோமோ அந்த நம்பரை சொன்னால் தொடர்பு ஏற்படுத்தி தருவார் அதிரை முழுவதும் இரண்டு இலக்க எண்கள்தான் வண்டிப்பேட்டையில் 40 வாடி என்ற பெயர் கொண்ட தேங்காய் மண்டி இருக்கிறது அதற்க்கு 40 வாடி எனும் பெயர் காரணமே போன் நம்பர் 40
பொது தொலைபேசி என்றால் post office செல்லவேண்டும் trank call book செய்து அரை மணி நேரமாவது காத்திருக்க வேண்டும்[இன்றைய இளைஞர்களிடம் சொன்னால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்]
ஹிஜ்ரி 1432 or ஆங்கில வருடம் 2013 இன்றைய பொழுதை 30 வருடங்களுக்கு முந்தைய நாட்களோடு ஒப்பிட்டால்! ஏகப்பட்ட மாற்றங்கள் உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டோம் உலகத்தை நினைத்த நபரை தொடர்புகொள்ள அவர் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் no problem நொடிக்குள் தொடர்புகள் வந்து விடுவார்கள் அவர்களின் பிரத்யோக என் மட்டும் தெரிந்தால் போதும் பழய காலத்தில் ஒருவரை விசாரித்தால் பெயர்,தகப்பனார் பெயர், தெரு, ஆகியவைகளோடு குடும்பமும் விசாரிக்கப்படும் இன்று உன் பெயரென்ன என்ற கேள்வியோடு உன் செல் நம்பரென்ன வாக முடிகிறது.
மற்றொரு விஷயம் வலைதள தில்லு முள்ளுகளும் உண்டு சுதாரிக்காமல் விட்டாலோ பேராசை கொண்டாலோ சில கில்லாடிகளின் வலையில் சிக்கியவர்கள் ஏராளம் சைபர் க்ரைம் என்ற ஒரு துறையே நம் அரசு வைத்துள்ளது அத்துனையும் வலைதள தகிடுதித்தங்களுக்காகவே விஷமிகளை கண்டறியும் துறையாகும்.
ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் Touch Screen [ தொடு திரை ] களாகவே இருக்கின்றது இதுவும் அற்புத விளக்கை[ஞபகப்படுத்துகின்றன] தடவினால் பூதம் வருவதுபோல் திரைகள் விரிகின்றன ஆலம்பனா என்ன வேண்டும் என்பதுபோல் Search பகுதி மினுக்கும். கேட்டது கிடைக்கும்?! அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை கேட்டு இருப்பீர்கள் நான் ஒருமுறை ரிப்பிட் செய்கிறேன் கேளுங்கள் ஒரு ஏழை மனிதருக்கு [அலாவுதீன்] அற்புத விளக்கு கிடைக்கிறது அதை எடுத்து ஆசையாய் விளக்கை தடவுகிறார் பூதமும் வெளியாகின்றது ஆலம்பனா என்ன வேண்டும் கேளுங்கள் என்கிறது பேராசை கொண்ட அந்த மனிதரோ எனக்கு பெரிய பங்களா வேண்டும் அதுவும் அம்பானியின் பங்களாவைவிட பெரியதாய் இருக்கவேண்டும் என்கிறார் பூதம் அவனை உற்று நோக்கியது கன்னத்தில் பளார் என ஒரு அறை அறைந்து நானே சிறிய விளக்குகள் அடைபட்டு கொண்டு காலத்தை கழிக்கிறேன்[செய்வது அறியாது]நீ என்னடானா பெரிய பங்களாவா அதுவும் அம்பானியைவிட பெரிதாக இருக்க வேண்டுமா என்று மீண்டும் ஒரு அறை அறைந்தது
இது வலைதளத்தில் ஏமாந்தவர் பட்ட அடிபோல் ?! பூதத்திடம் அடிவாங்கினார். நாமும் கன்னத்தில் ஒரு கையை மரைத்தவன்னமே தொடு திரை தேடலை தொடர்வோமா [ எந்த நேரமும் அலார்ட்டா இருக்கோணும் ஆமாம் :) ]
மு. செ. மு. சபீர் அஹமது
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇப்போது உலகமே ஒரு கையில் அடங்கி விட்டது என்று சொல்லலாம்.
யோசிக்க தூண்டும் சிறந்த படைப்பு
ReplyDeleteநிகழ்வின் நடுவே அடிக்கடி நம்ம அலாவுதீன்!
ReplyDeleteஅருமை!
சகோதரர் சபீர் அவர்களின் வித்தியாசமான சிந்தனையில் பழைய நினைவு கூறலுடன் நல்ல புதுமைப் படைப்பு அருமை வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொண்டன் 1: நம்ம தலைவரோட செல் நம்பர் என்னனு கேட்டேன் 26 ன்னு சொல்றார் ஒன்னும் புரியல
ReplyDeleteதொண்டன் 2: அது அவரோட ஜெயில் செல் நம்பருடா
ரசித்து ருசித்த நினைவூட்டல், அருமையான பதிவு. நன்றி
ReplyDeleteசொல்ல வந்ததை சரியாய் சொன்னாய் நண்பா ..
ReplyDeleteஅலாவுதீன் பூதம் அறிந்ததுதான் சரியான கூத்து ..
இந்த கால பூதம் ரொம்ப சமத்து ...
இன்றைய தொலை தொடர்புக்கு ரிலையன்ஸ்,டாட்டா டோகாமா,bsnl,ஏர் டெல்,போன்ற ஜாம்பவான்கள் துணையிருக்க அன்றைய காலம் நம் ஒரே துணை தொ.க. ஒருவரே சரிதானே
ReplyDelete