.

Pages

Saturday, February 1, 2014

செடியன் குளத்தில் ADT நடத்திய மழை தொழுகையில் பெரும்திரளானோர் பங்கேற்பு !

அதிரைக்கு மழை வேண்டி வறண்டு காணப்படும் நமதூர் செடியன் குளத்தில் இன்று காலை 9 மணியளவில் அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ] சார்பில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள், பெண்கள் உட்பட பெரும்பாலானோர் திரளாக வருகை தந்து கலந்துகொண்டனர்.

முன்னதாக மார்க்க பிராச்சாரகர் அப்துல் ஹமீது அவர்களால் மழை தொழுகை குறித்து விளக்கத்தில் 'சட்டையை திருப்பி அணிந்து தொழும் படியும், மழை வேண்டி இறைவனிடம்  இரு கைகளின் புறங்கைகளை உயர்த்தி பிரார்த்தியுங்கள்' என குறிப்பிட்டு பேசினார்.

ஒழு செய்வதற்காக ட்ரம்களில் தண்ணீர் நிரப்பி வைத்து இருந்தனர். ஆங்காங்கே தண்ணீர் பாக்கெட்களும் விநியோகம் செய்யப்பட்டன. தொழுவதற்காக வந்திருந்த பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தொழுகை முடிந்தவுடன் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக நீடித்த இந்த பிரார்த்தனையில் தொழுகையில் கலந்துகொண்ட அனைவரும் இறைவனிடம் மனம் உருகி தனித்தனியே பிரார்த்தனை செய்தார்கள்.








11 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் அன்பார்ந்த அதிரை மக்களே தாங்கள் செய்த பாவங்களை நினைத்து அல்ல்லஹுவிடம் பாவ மன்னிப்பு கேட்டு அதிரை நகருக்கு மழை பெய்ய துவா செய்தவருகளுக்கு நன்றி

    ReplyDelete
  3. குறிப்பு:

    அன்பான அதிரை சொந்தங்களே! இணைய, வலைதள நிர்வாகிகளே!

    ADT அழைப்பை ஏற்று தொழுகையில் கலந்து கொண்டதுடன் ஊரின் நலனுக்காக மார்க்க அடிப்படையில் ஒன்று சேர்ந்து பிரார்த்தித்த ஈர நெஞ்சங்களே! செய்தி வெளியிட்டு கடமையாற்றிய இணைய சகோதரர்களே! உங்களின் மானமார்ந்த பிரார்த்தனையை ஏற்று எல்லாம் வல்ல அல்லாஹ் நமதூரின் மீதும் இன்னும் தேவையுடைய அனைத்து பிரதேசங்களின் மீதும் மழையை வருஷிப்பானா! உங்கள் ஒவ்வொருவர் மீது தன் பேரருளையும் இரக்கத்தையும் பொழிவானாக! என இருகரமேந்தி இறைஞ்சுகிறோம்.

    ReplyDelete
  4. எல்லாம் வல்ல அல்லாஹ் நமதூரின் மீதும் இன்னும் தேவையுடைய அனைத்து பிரதேசங்களின் மீதும் மழையை பொழிய செய்வானாகவும் ஆமீன்;உங்கள் ஒவ்வொருவர் மீது தன் பேரருளையும் இரக்கத்தையும் பொழிவானாக! என இருகரமேந்தி இறைஞ்சுகிறோம்.

    ReplyDelete
  5. நிச்சயமாக உங்களில் ஒற்றுமையான ஜமாத்துகளை கூறு போட்டு பிரிப்பவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக்கபடுவார்கள்.மேலும் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மற்றும் நிர்ணயம் செய்யபட்டவைகளும் அவர்களின் செயலுக்காக அல்லாஹ்வால் தடுத்து
    நிறுத்திவைக்கப்படும்.அஸ்தாஹ்பிருல்லாஹ் ........

    ReplyDelete
  6. நிச்சயமாக உங்களில்
    ஒற்றுமையான ஜமாத்துகளை
    கூறு போட்டு பிரிப்பவர்கள்
    அல்லாஹ்வின் கோபத்திற்கு
    ஆளாக்கபடுவார்கள்.

    மேலும் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மற்றும் நிர்ணயம் செய்யபட்டவைகளும்
    அவர்களின் செயலுக்காக
    அல்லாஹ்வால் தடுத்து
    நிறுத்திவைக்கப்படும்.
    அஸ்தாஹ்பிருல்லாஹ் ......

    ReplyDelete
  7. Adiraiel ulla eslameyan anaivarum ullaththal onru patdu kuutdaka thuva pannavum. Malai veande paith thum padeththu erukkalamea

    ReplyDelete
  8. நமது சமுதாய அமைப்பைச் சார்ந்த சிலர் சமூக தளங்களில் வாய் கூசும் தகாத வார்த்தைகளால் அலங்கரித்து(இதைத்தான் சமுதாய அமைப்புத் தலைவர்கள் கற்றுக் கொடுத்துள்ளனரா?).. நம் கண்ணியத்தை கடைவிரித்துள்ள வேளையில், இந்த எதிலும் சாராமல் தனி அமைப்பாக விளம்பரம் தேடாமல் சேவை புரிந்து வரும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினை மனமுவந்து பாராட்டலாம்..

    ReplyDelete
  9. சமூக அக்கறையுடன் தேவைகளை எந்தொரு பிரபளியமில்லாமல் நடத்தி பலரும் கலந்து தன் ஊரின் மழை அவசியத்தை படைத்த நாயனிடம் மண்டியிட்டு முறையிட வாய்ப்பளித்த ADT அமைப்பினருக்கு நன்றி

    ReplyDelete
  10. எல்லோரும் தலைவராக வேண்டும். என்ன செய்ய. எதுவும் செய்திட தொண்டர்கள் மலிந்து கிடைக்கிறார்கள். அதற்கு பல அமைப்புகள் வேண்டும். இவைகளே இன்றைய நடப்புகள். ஒரே வீட்டில் பல வெடிப்புகள் அல்லது ஒரே குடும்பத்தில். பிரிவுகள் கிளைகளாக பின் தனிமைகளாக, தனித்தே உடைந்தே சிதறியே பின் சின்னாப்பினமாக........................போகலாமா ?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.