.

Pages

Saturday, February 1, 2014

முஸாபர் நகர மக்களுக்காக த.மு.மு.க வினர் அதிரையில் திரட்டிய ரூ 2,01,850/- ஒப்படைப்பு !

முஸாபர் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவரின் துயரை போக்கும் வகையில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிக்கக்கோரி தலைமையகத்தின் அறிவிப்வை அடுத்து தமுமுக வின் அதிரை கிளையினர் கடந்த [ 10-01-2014 ] முதல் நிதி திரட்டும் பணியில் மும்முரமாக  ஈடுபட்டனர். இதற்காக அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று வசூலில் ஈடுபட்டனர்.

இவர்களின் தொடர் முயற்சியில் அதிரை நகர பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ரூபாய் 2,01,850/- ஐ [ இரண்டு இலட்சத்து ஆயிரத்து எண்ணூற்று ஐம்பது மட்டும் ] இன்று மாலை பட்டுக்கோட்டை அரசு பிளாசாவில் நடைபெற்ற 'நிதி அளிப்பு' நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநிலத் தலைவர் J.S. ரிஃபாயி ரஷாதி அவர்களிடம் தஞ்சை மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சாகுல் ஹமீது, த.மு.மு.க அதிரை நகரத் தலைவர் சாதிக் பாட்சா, செயலாளர் தமீம் அன்சாரி, த.மு.மு.க / ம.ம.க பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி, ம.ம.க நகர செயலாளர் ஹாலித், துணைச்செயலாளர் சேக் நசுருதீன் ஆகியோர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அதிரை நகர த.மு.மு.க / மமக நிர்வாகிகள் உள்ளிட்ட தஞ்சை தெற்கு பகுதிகளிலிருந்து வந்திருந்த பலர் கலந்துகொண்டனர்.






4 comments:

  1. மாஷா அல்லாஹ் வாழ்க உங்கள் மக்கள்பணி ...

    ReplyDelete
  2. குளிர் தாங்காமல் இரஞ்சு கிடந்தது இளம்பிஞ்சுகள் எல்லாம் இறைவனடி சேர்ந்து இன்றுவரைக்கும் கண்டுகொள்ளாத அகிலேஷ் அரசும்..... அடியெடுத்து அறைகூவல் விடுத்த தலைமை த.மு .மு க ,மனமுவந்து அள்ளித்தந்த அதிரை நல்உள்ளங்களுக்கும் "அல்லாஹ்"நற்கூலியை கொடுப்பனாகவும் அமீன்

    ReplyDelete
  3. குளிர் தாங்காமல் இரஞ்சு கிடந்தது இளம்பிஞ்சுகள் எல்லாம் இறைவனடி சேர்ந்து இன்றுவரைக்கும் கண்டுகொள்ளாத அகிலேஷ் அரசும்..... அடியெடுத்து அறைகூவல் விடுத்த தலைமை த.மு .மு க ,மனமுவந்து அள்ளித்தந்த அதிரை நல்உள்ளங்களுக்கும் "அல்லாஹ்"நற்கூலியை கொடுப்பனாகவும் ஆமீன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.