மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து இரண்டாம் கட்ட முகாம் நடத்துவது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பையன் பேசியது:
மாவட்டத்தில் பிப். 23-ம் தேதி நடைபெறும் இரண்டாவது சுற்றில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 218 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 6,040 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும் 178 மேற்பார்வையாளர்களும், 120 மருத்துவ அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நகரப்பகுதிகளில் 128 மைங்களும், ஊரகப் பகுதிகளில் 1,382 மையங்களும் என மொத்தம் 1,510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணைச் சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பிப். 23-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு, 24 மணி நேரமும் சொட்டு மருந்து வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வேலை நிமித்தமாக வெளி மாநிலங்களிலிருந்து இங்கு வந்து தாற்காலிகமாக தங்கியிருக்கும் மக்களின் குழந்தைகளுக்கும் மற்றும் நாடோடிகளாக இடம் பெயர்ந்து செல்லும் மக்களின் குழந்தைகளுக்கும் விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முகாம்களில் உள்ளுர் மற்றும் வெளியூர் குழந்தைகள் யாராக இருந்தாலும் சொட்டு மருந்து வழங்கப்பட்டு குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும் என்றார்.
நன்றி : தினமணி
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.