.

Pages

Saturday, February 22, 2014

அதிரையில் நாளை இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் !


அதிரையில் இரண்டாம் கட்டமாக நாளை [ 23-02-2014 ] காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையம், மஹல்லா சங்கங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் சொட்டு மருந்துகள் வழங்கப்படும்.

மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து இரண்டாம் கட்ட முகாம் நடத்துவது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பையன் பேசியது:
மாவட்டத்தில் பிப். 23-ம் தேதி நடைபெறும் இரண்டாவது சுற்றில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 218 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 6,040 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும் 178 மேற்பார்வையாளர்களும், 120 மருத்துவ அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

நகரப்பகுதிகளில் 128 மைங்களும், ஊரகப் பகுதிகளில் 1,382 மையங்களும் என மொத்தம் 1,510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணைச் சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பிப். 23-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு, 24 மணி நேரமும் சொட்டு மருந்து வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேலை நிமித்தமாக வெளி மாநிலங்களிலிருந்து இங்கு வந்து தாற்காலிகமாக தங்கியிருக்கும் மக்களின் குழந்தைகளுக்கும் மற்றும் நாடோடிகளாக இடம் பெயர்ந்து செல்லும் மக்களின் குழந்தைகளுக்கும் விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முகாம்களில் உள்ளுர் மற்றும் வெளியூர் குழந்தைகள் யாராக இருந்தாலும் சொட்டு மருந்து வழங்கப்பட்டு குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும் என்றார்.

நன்றி : தினமணி 

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.