சுமார் 300 அடி நீளமுள்ள இந்த வடிகாலில் அப்பகுதியை சுற்றிக்காணப்படும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சென்று வந்தது. வடிகால் திறந்த நிலையில் காணப்பட்டதால் இங்கு சேரும் குப்பை, கூளங்கள், மணல்கள் வடிகாலில் புகுந்து அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி காணப்பட்டது. துர்நாற்றமும் வீசி வந்தது.
இந்நிலையில் இந்த வடிகாலில் சூழ்ந்துள்ள கழிவு மணல்கள் முழுவதும் அப்புறப்படுத்தும் பணி இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. வடிகாலில்
ஏற்பட்டுள்ள அடைப்புகள் சீர் செய்யப்பட்டன. இந்த பணிகளை அதிரை பேரூராட்சியின் 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப் மேற்பார்வையில் அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் 6 பேர் ஈடுபட்டனர்.
அதிரை பேரூராட்சியின் 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப், தனது வார்டு பகுதியில் காணப்படும் குறைகளை அவ்வப்போது அதிரை பேரூராட்சியின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதோடு மட்டுமல்லாமல் குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் விதத்தில் ஊழியர்களோடு களத்தில் கூடநின்று வேலை வாங்கும் பாங்கை இப்பகுதியினர் வெகுவாக பாராட்டினர். 'இவரைப்போன்று அதிரையின் பிற பகுதிகளின் வார்டு கவுன்சிலர்களும் அதிக ஈடுபாட்டோடு பொதுநலப்பணி ஆற்ற முன்வர வேண்டும்' என மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டனர்.









In javiya road( opposite javiya ) from 4 to 5 years still now street lights not installed. When will he ( Abdul lattif) take action ?
ReplyDeleteIn 4 to 5 years how many times did you asked or complain to Latif ?
ReplyDeleteHi friends very to happy see our councilor Mr latheef's dedication work and more involvement is successful of symbol
ReplyDelete