.

Pages

Tuesday, December 1, 2015

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு போட்டிகள்: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு !

தஞ்சாவூர் மாவட்டம் சங்கீத மகாலில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.

உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்று மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.   மாவட்டத்தில் எய்ட்ஸ்ல் இறப்பு இல்லை என்ற இலக்கினை அடைய வேண்டும் என்ற இலக்கினை கொண்டு மாவட்ட நிர்வாக திறம்பட செயலாற்றி கொண்டிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.  கிராமிய கலைக்குழுக்கள் வழியாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, தெரு முனை பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் அரச மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வருபவர்களுக்கு ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்கள் மற்றும் சுகவாழ்வு மையங்கள் மூலமாக எச்ஐவி பற்றிய ஆலோசனை வழங்கி பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட புதிய நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தலைமை மருத்துவமனை, பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 29 எச்ஐவி பரிசோதனை மையங்களும்,  பால்வினை பரிசோதனை செய்து கொள்ள 6 மையங்களும், 4 இரத்த வங்கிகளும், 2 கூட்டு மருத்து சிகிச்சை மையங்களும், ( Anti Retro Viral Therapy )  6 அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் எச்ஐவி எய்ட்ஸ் தடுப்பு பணியில் செயல்படுகின்றனர். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்.

மாவட்ட எய்ட்ஸ் அலகில் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பள்ளி மாணவ மாணவியர்களிடையே பேச்சுப்போட்டி, ஒவியப்போட்டி, வினாடி வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசுகளை வழங்கினார்.  மேலும், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகில் சார்பில் சமபந்தி போஜனத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்றார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். “எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்து முழுமையாக அறிந்திடுவேன். அறிந்ததை என் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தெரிவித்திடுவேன். எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்று இல்லாத குடும்பத்தை உருவாக்கிடுவேன்.   இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள தன்னார்வமாக முன் வருவேன்.  எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்றுள்ளோரை அரவணைப்பேன், சம உரிமை அளிப்பேன் என உளமார உறுதி அளிக்கின்றேன்” என்ற உறுதிமொழியனை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில்  சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயசேகர், துணை இயக்குநர்கள் டாக்டர் அ.சுப்ரமணி, டாக்டர் சந்திரசேகர், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பிச்சை பாலசண்முகம், முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ரெ.திருவளர்செல்வி, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை முதல்வர் திரு.ஷேக் அலாவுதீன், மாவட்ட திட்ட மேலாளர் திரு.எம்.மாதவன், மாவட்ட திட்ட மேற்பார்வையாளர் எம்.திருநாவுக்கரசு, எச்ஐவி கூட்டமைப்பு தலைவர் திரு.அண்ணாதுரை மற்றும் மாணவ மாணவியர்கள்  ஆகியோர் பங்கேற்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.