.

Pages

Monday, December 14, 2015

சவூதியில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிலுவைத் தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள்  தலைமையில் இன்று (14.12.2015) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை  பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்  நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

சவுதி அரேபியாவில் பணியாற்றிய போது இறந்த போது பட்டுக்கோட்டை வட்டம், த.மறவக்காடு கிராமத்தைச் சேர்ந்த (லேட்) சுவாமிநாதன் பெத்தபெருமாள் முருகன் என்பவரின் வாரிசான திருமதி.தவமணி என்பவருக்கு சேர வேண்டிய சட்ட படியான நிலுவைத்தொகை  ரூ.7 இலட்சத்து 13 ஆயிரத்து 158 க்கான காசோலையினையும், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 16 மாற்றுத் திறானளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமசடங்கு உதவித்தொகையாக அவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூ.2 இலட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான காசோலையினையும், 9 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.

ஆக மொத்தம் 26 நபர்களுக்கு ரூ.9 இலட்சத்து 85 ஆயிரத்து 158 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) திரு.விநாயகமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.கங்காதரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.