.

Pages

Monday, December 28, 2015

தூய்மை பணியில் தன்னார்வ அதிரை இளைஞர்கள் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டு பகுதியில் குப்பைகளை அள்ளிச்செல்வதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து களத்தில் இறங்கிய தன்னார்வ அதிரை இளைஞர்கள் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அதிரை பேரூராட்சி 15 வது வார்டு பகுதி செயனாங் குளம் அருகே மலைபோல் தேங்கி கிடந்த குப்பை கூளங்களை இந்த பகுதியை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் தானாக முன்வந்து அப்புறப்படுத்தினார்கள். இந்தபணிக்காக மம்பட்டி, கம்பு, வாங்கருவாள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினார்கள்.

மேலும் செடியன் குளம் அருகே உள்ள பாதை அப்பகுதி குடியிருப்பிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் சேரும், சஹதியாக காணப்பட்டது. இதனால் இந்த பாதையை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைந்தனர். இந்நிலையில் இந்த பகுதியை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் ஒன்றிணைந்து பாதையை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்ட பணியை அடுத்து தற்போது இப்பகுதி தூய்மையாக காட்சியளிக்கிறது. மேலும் காட்டுப்பள்ளி பகுதியில் காணப்படும் முட்புதர்கள், கழிவு கூளங்களை தீயிட்டு கொளுத்தினார்கள். இளைஞர்களின் சுயநலமற்ற சமூக பணியை பலரும் பாராட்டி வாழ்த்தினார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2 comments:

  1. அதே பணியில் செந்தலைபட்டிணம் பொது நலச்சங்கத்தினர் செந்தலைபட்டிணத்தில்

    ReplyDelete
  2. அதே பணியில் செந்தலைபட்டிணம் பொது நலச்சங்கத்தினர் செந்தலைபட்டிணத்தில்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.