அதிரை பேரூராட்சி 15 வது வார்டு பகுதி செயனாங் குளம் அருகே மலைபோல் தேங்கி கிடந்த குப்பை கூளங்களை இந்த பகுதியை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் தானாக முன்வந்து அப்புறப்படுத்தினார்கள். இந்தபணிக்காக மம்பட்டி, கம்பு, வாங்கருவாள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினார்கள்.
மேலும் செடியன் குளம் அருகே உள்ள பாதை அப்பகுதி குடியிருப்பிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் சேரும், சஹதியாக காணப்பட்டது. இதனால் இந்த பாதையை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைந்தனர். இந்நிலையில் இந்த பகுதியை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் ஒன்றிணைந்து பாதையை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்ட பணியை அடுத்து தற்போது இப்பகுதி தூய்மையாக காட்சியளிக்கிறது. மேலும் காட்டுப்பள்ளி பகுதியில் காணப்படும் முட்புதர்கள், கழிவு கூளங்களை தீயிட்டு கொளுத்தினார்கள். இளைஞர்களின் சுயநலமற்ற சமூக பணியை பலரும் பாராட்டி வாழ்த்தினார்கள்.
அதே பணியில் செந்தலைபட்டிணம் பொது நலச்சங்கத்தினர் செந்தலைபட்டிணத்தில்
ReplyDeleteஅதே பணியில் செந்தலைபட்டிணம் பொது நலச்சங்கத்தினர் செந்தலைபட்டிணத்தில்
ReplyDelete