இந்நிலையில் மலேசியா பினாங்கில் உணவகம் நடத்தி வரும் அதிரையை சேர்ந்த மூமீன் நானா அவர்களின் மகன் அன்வர், தான் வசிக்கும் பகுதியில் இன்று காலை தத்ரூபமாக கண்ட முழு சூரிய கிரகணத்தின் புகைப்படங்கள் அனுப்பி வைத்தார்.
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படும். இந்த நிகழ்வு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. முழு சூரிய கிரகணத்தின்போது, சந்திரன், சூரியனை முழுவதுமாக மறைத்து ஒரு வளையம் போல் தெரியும்.
முழு சூரிய கிரணம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும். இந்தியாவில் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழ்ந்தது.
இந்நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம் இன்று (புதன்கிழமை) நிகழ்கிறது. இந்தியாவில் பாதி சூரிய கிரகணத்தையே பார்க்க முடியும். ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, வாரணாசி, மைசூர், மங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் சூரிய கிரகணத்தைக் காணலாம். சென்னையில் காலை 6.20 மணி முதல் 6.48 மணி வரை 28 நிமிடம் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்.
Arumaiyana pathevu niza.
ReplyDeletevalththukkal
ரம்மியமான காட்சியை ரசிக்கும் நாம் இறைவன் இருகின்றான் என்பதற்கு சூரிய கிரகணமும் ஒரு ஆதாரம். மனிதர்கள் முன் கூட்டியே அறிய அவ்வளவு கட்சிதமாக கணக்கின் படி சுழல ,சுற்ற செய்தது யார் ? நம்மை படைத்த அல்லாஹ் தானே!. அதிரையில் காணமுடியாவிட்டாலும் இந்நிகழ்வை படம்பிடித்து அனுப்பியதற்கு நன்றி.
ReplyDelete