.

Pages

Wednesday, March 9, 2016

முழு சூரிய கிரகணம்: தத்ரூபமாக படம் பிடித்து அனுப்பிய மலேசியா வாழ் அதிரையர் !

இந்தியாவில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (புதன்கிழமை) முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த கிரகணத்தை சென்னையில் 28 நிமிடங்கள் பார்க்கலாம்.

இந்நிலையில் மலேசியா பினாங்கில் உணவகம் நடத்தி வரும் அதிரையை சேர்ந்த மூமீன் நானா அவர்களின் மகன் அன்வர், தான் வசிக்கும் பகுதியில் இன்று காலை தத்ரூபமாக கண்ட முழு சூரிய கிரகணத்தின் புகைப்படங்கள் அனுப்பி வைத்தார்.

பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படும். இந்த நிகழ்வு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. முழு சூரிய கிரகணத்தின்போது, சந்திரன், சூரியனை முழுவதுமாக மறைத்து ஒரு வளையம் போல் தெரியும்.

முழு சூரிய கிரணம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும். இந்தியாவில் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழ்ந்தது.

இந்நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம் இன்று (புதன்கிழமை) நிகழ்கிறது. இந்தியாவில் பாதி சூரிய கிரகணத்தையே பார்க்க முடியும். ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, வாரணாசி, மைசூர், மங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் சூரிய கிரகணத்தைக் காணலாம். சென்னையில் காலை 6.20 மணி முதல் 6.48 மணி வரை 28 நிமிடம் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்.
 
 
 
 

2 comments:

  1. Arumaiyana pathevu niza.
    valththukkal

    ReplyDelete
  2. ரம்மியமான காட்சியை ரசிக்கும் நாம் இறைவன் இருகின்றான் என்பதற்கு சூரிய கிரகணமும் ஒரு ஆதாரம். மனிதர்கள் முன் கூட்டியே அறிய அவ்வளவு கட்சிதமாக கணக்கின் படி சுழல ,சுற்ற செய்தது யார் ? நம்மை படைத்த அல்லாஹ் தானே!. அதிரையில் காணமுடியாவிட்டாலும் இந்நிகழ்வை படம்பிடித்து அனுப்பியதற்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.