.

Pages

Monday, March 7, 2016

முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு தமிழக முதல்வர் விருது !

முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜ்குமார். இவர் 2013-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் டெக்கான்பூர் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி முகாமில் இந்திய அளவிலான தீவிரவாத எதிர்ப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் குறித்த ஒத்திகைப்பயிற்சி நடைபெற்றது. இதில் அவர் பங்கேற்றார்.

அதே போல் அதே முகாமில் குறிப்பார்த்து சுடுதல், மணல் மூட்டையினை சுமந்தபடி இலக்கை நிற்னயித்த நேரத்திற்குள் அடைதல் மற்றும் 20 தடைகள் கொண்ட பாதையை தடைதாண்டி அடைதல், தீவிரவாதியைக் கண்டறிந்து முற்றுகையிட்டு சுற்றி வளைத்தல்(ஸ்மெல் டீம் ஆப்ரேஷன்) போன்ற ஆறு வகை பயிற்சிப் போட்டி நடைபெற்றது. இதில் அனைத்திலும் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றார்.

அதற்காக சமீபத்தில் சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு விருது மற்றும் ரொக்க பரிசு வழங்கினார். விருது பெற்ற இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் மொய்தீன் பிச்சை,முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.