.

Pages

Tuesday, March 8, 2016

முத்துப்பேட்டை அருகே டிராக்டர் மோதி வி.ஏ.ஓ உதவியாளர் பரிதாப பலி !

முத்துப்பேட்டை அடுத்த வேப்பஞ்சேரி கீழத்தெருவைச் சேர்ந்தவர் இடும்பன் மகன் அருள்முருகன்(38). இவர் கள்ளுக்குடி கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டு கள்ளுக்குடி மெயின் ரோடு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி எதிரே சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது பின்புறம் ஓட்டத்தெரியாமல் தறிக்கெட்டு ஓடிய வந்த டிராக்டர் அருள்முருகன் மீது மோதி சாலை ஓரம் உள்ள குளத்திற்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வி.ஏ.ஓ. உதவியாளர் அருள்முருகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் இன்ஸ்பெக்டர் முருகன் அருள்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வதை;தார். பின்னர் நடந்த விசாரணையில் விபத்து ஏற்பட்ட டிராக்டர் வினோத் என்பவருக்கு சொந்தமானது என்றும், டிராக்டரை ஓட்டி வந்தவர் நெடும்பலத்தைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன் மகன் கோபால கிருஷ்ணன்(17) என்றும் தெரியவந்தது.

மேலும் கோபால கிருஷ்ணனுக்கு டிராக்டர் ஓட்டத்தெரியாது என்பதால் கருவேப்பஞ்சேரியிலிருந்து எடுத்து வரப்பட்ட டிராக்டர் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டத்தெரியாமல் சாலையில் அங்கும் இங்குமாக தரிக்கட்டி சென்றுள்ளது. இந்த நிலையில்தான் வி.ஏ.ஓ. உதவியாளர் அருள்முருகன் இதில் சிக்கி பலியானார் என்று தெரியவந்தது. டிராக்டர் ஓட்டி வந்த கோபால கிருஷ்ணன் விபத்து நடந்ததும் அங்கிருந்தவர் தப்பி ஓடியதால் அவரைப் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் மொய்தீன் பிச்சை,முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.