நிகழ்ச்சிக்கு கல்லூரி துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் எம் சாபிரா பேகம், பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பேராசிரியர் எம். பிரேம் நவாஸ், முனைவர் ஓ.சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முன்னாள் அலுவலர்கள் பேராசிரியர் முனைவர் நாசர், பேராசிரியர் முனைவர் அப்துல் ஜலீல், பேராசிரியர் முனைவர் முஹம்மது முகைதீன், பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், மேஜர் முனைவர் எஸ்.பி கணபதி, உடற்கல்வி இயக்குனர் முனைவர் முருகானந்தம் ஆகியோர் மகளிர் தின வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருச்சி காவிரி மகளிர் கல்லூரி பேராசிரியை மா ஆசியாதாரா மகளிர் தின உரை நிகழ்த்தினார். மேலும் விழா முடிவில் நடந்த கலந்துரையாடலில் மாணவிகள் எழுப்பிய மனநலம் சார்ந்த கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்து பேசினார்.
முன்னதாக நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் முனைவர் ஓ. சாதிக் கிராத் ஓதினார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சிகள் அனைத்தையும் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். விழா முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் எம். பிரேம் நவாஸ் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகள், நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள், கல்லூரி மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.