ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி 11 வயது சிறுமி விமானத்தில் பயணம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடையாள அட்டை, பயணச்சீட்டு என எதுவும் இன்றி சிறுமி ஒருவர் விமானத்தில் பயணம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். பாதுகாப்பு காமிராவில் பதிந்துள்ள காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது இச்சம்பவம் வெளிவந்துள்ளது.
மாஸ்கோவின் Vnukovo விமான நிலையத்தில் தனியாக வந்த 11 வயது மதிக்கத்தக்க இந்த சிறுமி விமான நிறுவன ஊழியர்களை முதலில் ஏமாற்றியுள்ளார். அவர்களின் சோதனையில் இருந்து தப்பிய அவர், விமான பயணச்சீட்டு மற்றும் ஆவணங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தும் பகுதியில் பயணிகளில் ஒருவராக வரிசையில் நின்றுள்ளார்.
சக பயணிகளின் ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருக்கும் போது அவர்களை ஏமாற்றிவிட்டு இவர் உள்ளே நிழைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கூட்ட நெரிசல் காரணமாகவும், அங்கிருந்த ஒரு குடும்பத்துடன் இணைந்து காணப்பட்டதாலும் விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழவில்லை என்பது மட்டுமல்ல, எவரும் அந்த சிறுமியை கேள்வி கேட்கவும் இல்லை.
இதனையடுத்து பாதுகாப்பு சோதனையும் முடித்து அவர் பீட்டர்ஸ்பர்க் நகரில் தரையிறங்கும் வரை எவருக்கும் அவர் மீது சந்தேகம் எழவில்லை. 90 நிமிட பயணத்தின் பின்னர் தாயாரிடம் இருந்து வந்த தொலைப்பேசி அழைப்பு தான் சிறுமியை விமான நிலைய அதிகாரிகளின் கைகளில் சிக்க வைத்தது.
இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் சிலர் ஒன்றிணைந்து சிறுமியை மீண்டும் மாஸ்கோவுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்ட அதிகாரிகள் அதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அடையாள அட்டை, பயணச்சீட்டு என எதுவும் இன்றி சிறுமி ஒருவர் விமானத்தில் பயணம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். பாதுகாப்பு காமிராவில் பதிந்துள்ள காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது இச்சம்பவம் வெளிவந்துள்ளது.
மாஸ்கோவின் Vnukovo விமான நிலையத்தில் தனியாக வந்த 11 வயது மதிக்கத்தக்க இந்த சிறுமி விமான நிறுவன ஊழியர்களை முதலில் ஏமாற்றியுள்ளார். அவர்களின் சோதனையில் இருந்து தப்பிய அவர், விமான பயணச்சீட்டு மற்றும் ஆவணங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தும் பகுதியில் பயணிகளில் ஒருவராக வரிசையில் நின்றுள்ளார்.
சக பயணிகளின் ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருக்கும் போது அவர்களை ஏமாற்றிவிட்டு இவர் உள்ளே நிழைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கூட்ட நெரிசல் காரணமாகவும், அங்கிருந்த ஒரு குடும்பத்துடன் இணைந்து காணப்பட்டதாலும் விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழவில்லை என்பது மட்டுமல்ல, எவரும் அந்த சிறுமியை கேள்வி கேட்கவும் இல்லை.
இதனையடுத்து பாதுகாப்பு சோதனையும் முடித்து அவர் பீட்டர்ஸ்பர்க் நகரில் தரையிறங்கும் வரை எவருக்கும் அவர் மீது சந்தேகம் எழவில்லை. 90 நிமிட பயணத்தின் பின்னர் தாயாரிடம் இருந்து வந்த தொலைப்பேசி அழைப்பு தான் சிறுமியை விமான நிலைய அதிகாரிகளின் கைகளில் சிக்க வைத்தது.
இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் சிலர் ஒன்றிணைந்து சிறுமியை மீண்டும் மாஸ்கோவுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்ட அதிகாரிகள் அதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.