.

Pages

Monday, November 14, 2016

துபாய் அரசால் கௌரவிக்கப்பட்ட 13 துப்புரவு தொழிலாளர்கள் !

அதிரை நியூஸ்: துபாய், நவ-14
சமூகத்தால் அதிகம் ஈர்க்கப்படாத ஆனால் அமீரகத்தின் வளர்ச்சியின் அசைக்க முடியாததொரு அங்கமாக விளங்கும், தாங்களும் வாழ்வில் ஒரு நாள் தங்களின் தூய துய்மைப் பணிக்காக கண்ணியப்படுத்தப்படுவோம் என்ற கற்பனை கூட செய்திராத 13 துப்புரவு 'நாயகர்களை' துபை மாநகராட்சி மற்றும் அமீரகத்தில் கழிவு மேலாண்மை பணியில் ஈடுபட்டுள்ள சில முக்கிய நிறுவனங்களும் இணைந்து "Unsung City Cleaning Heroes Awards" எனும் விருது வழங்கி, பாராட்டுவிழா நடத்தி, பரிசளித்து, நற்சான்றிதழ்கள் தந்து ஊக்கப்படுத்தியுள்ளனர்.

வருடாவருடம் துபை மாநகராட்சி மட்டுமே நடத்தி வந்த இந்த பாராட்டு விழாவை இந்த வருடம் துபை, அபுதாபி, ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா என 4 அமீரகங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளனர். துபை மாநகராட்சி ஆரம்பத்தில் சான்றிதழ்களை மட்டுமே வழங்கி வந்த நிலையில் அது சான்றிதழுடன் 300 திர்ஹம் என வளர்ந்து இப்போது 1500 திர்ஹம் என உயர்ந்துள்ளது.

இந்த பரிசையும் பாராட்டையும் தொடர்ந்து 6 வது வருடமாக பெற்றுள்ளார் 15 வருடமாக துப்புரவு பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த முஹமது குட்டி. இவருடன் பரிசு பெற்றவர்களில் இன்னும் பல இந்தியர்களுடன் வேறு சில ஆசிய நாடுகளை சேர்ந்தோறும் அடங்குவர்.

அமீரகம் வாரியாக பரிசு பெற்ற இந்த எளிய மனிதர்களை நாமும் வாழ்த்துவோம்.

துபை: முஹமது குட்டி, முஹமது இப்ராஹீம் அலி காதர் மற்றும் கலீல் அஹமது.

அபுதாபி: சுடலாலி உருத்துமாடன், ஷாஜஹான் மியா, பன்டோ மியா மற்றும் அப்துல் காதர் மாணிக் கலீல்

ஷார்ஜா: ஹமீது அலி, முஹமது ஆரிப், நவீது ஹூசைன் மற்றும் முஹமது சந்த்.

ராஸ் அல் கைமா: முனீர் அஹமது முபீஸூல்லாஹ் மற்றும் ஜகீத் ஷஹீதுல்லாஹ்.

நினைவலை: சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் துபை மாநகராட்சி பல்வேறு துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய ஜாம்பவான்களை தேர்வு செய்து துபை மன்னர் ஷேக் முஹமது அவர்கள் கையால் விருது வழங்கி 50,000 திர்ஹம் பணப்பரிசும் வழங்கிய போது கடையந்லலூரைச் சேர்ந்த கடைநிலை துப்புரவு பணியாளர் ஒருவரும் ஜாம்பவான்களுடன் சேர்த்து கண்ணியப்படுத்தப்பட்டார்.

இது துபையில் மட்டுமே சாத்தியம்!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.