.

Pages

Monday, November 14, 2016

நிலா! நிலா ஓடி வா!!

அதிரை நியூஸ்:  நவ-14
வல்லரசு நாடுகள் ஒரு காலத்தில் நிலவை ஆராய ராக்கெட்டையும் விண்வெளி வீரர்களையும் நிலவுக்கு அனுப்பிக் கொண்டிருந்த காலத்தில் நம்மாளுங்க மட்டும் தான் நிலா, நிலா ஓடி வா என நிலவை பூமிக்கு அழைத்துக் கொண்டிருந்தனர். தற்போது நம்மாளுங்களும் நிலவில் இறங்கி ஆராயும் செயற்கைக் கோள் ஒன்றை 2017 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2018 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 'சந்திராயன் - 2' என்ற பெயரில் அனுப்பிட தயாராகி வருவதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்கள் என்ற செய்தியுடன் தலைப்பிற்குள் வருவோம்.

68 வருடங்களுக்குப் பின், தினமும் நாம் வானில் பார்க்கும் நிலா இன்று மட்டும் பூமிக்கு அருகில் சற்றே நெருங்கி வருவதால் அளவில் பெரிதாகவும், பளிச்சென்ற வெளிச்சத்துடனும் காட்சியளிக்கவுள்ளதாம்.

துபை நேரம் சரியாக மாலை 5.52 மணியளவில் அதாவது சரியாக மஃரிப் தொழுகைக்கு பாங்கு சொல்லும் நேரத்தில் நிகழவுள்ள இந்த அற்புதம் குறிப்பிட்ட நேரம் வரை நீடிக்கலாம். இந்தக் காட்சி கண்களால் பார்ப்பதற்கும் போட்டோ எடுப்பதற்கும் ரம்மியமாகவும் இருக்கும் என நாஸா சொல்கிறது.

தினமும் சராசரியாக 384,400 கிலோமீட்டர் தூரத்தில் தரிசனம் தரும் நிலா இன்று மட்டும் ரியல் எஸ்டேட்காரர்கள் பாஷையில் சொல்வதென்றால் பூமிக்கு மிக அருகில் 356,509 கிலோமீட்டர் தூரத்தில் இன்று காட்சியளிக்கவுள்ள நிலா தினமும் நாம் பார்க்கும் நிலவை விட 14 மடங்கு பெரிதாகவும், 30 சதவிகிதம் அதிக வெளிச்சமாகவும் தெரியும். மேலும், கடலிலும் அலைகள் உயரமாகவும், அதிகரித்தும் காணப்படும்.

'சூப்பர் மூன்' என்று அழைக்கப்படும் இந்த நிலா இதுபோல் மீண்டும் 2034 ஆம் ஆண்டு மீண்டும் வருமாம் அப்போது இன்னும் 64 கிலோமீட்டர் குறைந்து நம்ம பூமி பக்கம் வருமாம்.

அப்ப! நம்மாளுங்க நிலா, நிலா ஓடி வா என கூப்பிட்டது வீண் போகல போல !  அப்படியே நிலவில் பாட்டி வடை சுடுவதையும் ஒரு தடவை பார்த்து கன்பர்ம் பண்ணிக்கோங்க!

தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.