.

Pages

Monday, November 14, 2016

அதிரையில் காவல் நிலைய எழுத்தரை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம் ( வீடியோ )

அதிராம்பட்டினம் நவ-14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் காவல் நிலைய எழுத்தரைக் கண்டித்து தமுமுக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அப்துல் கபூர் மனைவி அனிஷா (32 ). குடும்பத்தலைவி. இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக்கோரி தஞ்சை பாஸ்போர்ட் சேவை மையத்தில் விண்ணப்ப மனு அளித்தார். அந்த மனு, விசாரணைக்காக அதிராம்பட்டினம் காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.

மனுவை விசாரிப்பதற்காக அதிரை காவல் நிலைய எழுத்தர் பழனியப்பன் கடந்த 10 மாதங்களாக விண்ணப்பதாரர் அனிஷாவை பலமுறை காவல் நிலையத்துக்கு வரவழைத்தும், திருப்பி அனுப்பியும் அலைக்கழித்தாராம்.

இந்நிலையில், விண்ணப்பதாரர் அனிஷாவின் மனு மீது உரிய விசாரணை நடத்தி முடிக்காமல், தேவையின்றி காலதாமதம் செய்து வரும் காவல் நிலைய எழுத்தர் பழனியப்பனை கண்டித்தும், உடனடியாக அவரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அதிரை காவல் நிலைய வாயிலில் தமுமுக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலர் அதிரை அஹமது ஹாஜா தலைமை வகித்தார்.  அவ்வமைப்பின் அதிரை செயலர் ஏ.ஆர். சாதிக்பாட்சா, பொருளாளர் செய்யது முகமது புகாரி, மனிதநேய மக்கள் கட்சியின் அதிரை செயலர் எஸ்.ஏ. இத்ரீஸ்அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் காவல் நிலைய எழுத்தரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதைத்தொடர்ந்து, அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தி, புகாருக்கு உள்ளான காவல் நிலைய எழுத்தர் பழனியப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அதிராம்பட்டினம் காவல்நிலையம் முன்பாக தமுமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் காணொளி...




 
 
 
 
 


 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.