.

Pages

Tuesday, November 1, 2016

துபாயில் அதிவேகமாக செல்லும் வாகனத்தை துல்லியமாகக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் !

அதிரை நியூஸ்: துபாய், நவ்-01
துபாய் சாலைகளில் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு பலவிதமான சாலைவிதிகளுடன் அதிவேகமாக செல்லுவோரை படம் பிடிக்கும் ரோடார் கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட வேகமாக வாகனத்தை செலுத்துவோர் கேமராக்கள் அருகே வரும் போது வேகத்தை குறைத்து நல்ல பிள்ளையாக வாகனத்தை ஓட்டிச்செல்வர் பின்னர் மீண்டும் தலைதெறிக்க வேகமெடுக்கும் வாகனம் அடுத்த கேமராவை பார்க்கும் போது தான் 'பம்மும்'. இப்படியாக, ரேடார் கேமராவுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையில் நடைபெறும் 'டாம் அன்ட் ஜெர்ரி' விளையாட்டுக்களை கட்டுப்படுத்த இதோ வந்துவிட்டது புதிய தொழிற்நுட்பம்.

அதாவது, ஒரு ரேடார் கேமராவிலிருந்து அடுத்த கேமிரா இருக்குமிடத்திற்கு எவ்வளவு வேகத்தில் வந்திருப்பார் என்ற தூரத்தையும் நேரத்தையும் வேகத்தையும் 'கூட்டி கழித்து கணக்கு போட்டு' பிடிக்கும் வைட்ரோனிக் அல்லது புருஜ் ரேடார் (Vitronic or Burj Radar) என அழைக்கப்படும் புதிய தொழிற்நுட்பத்தை விரைவில் துபையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர் ஆனால் எப்போது முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறதென சொல்லப்படவில்லை எனவே, அதுவரை டேஞ்சரஸ் என்ஜாய்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.