.

Pages

Tuesday, November 1, 2016

அபுதாபியில் நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டி !

அதிரை நியூஸ்: நவ்-01
அபுதாபியில் மூன்று ஒருநாள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இ .டி .ஏ மெல்கோ அணியும் மற்றும் எம்.எம்.சி சி அணியும் பங்கு பெற்றது. இதில் இரண்டு அணிகளிலும் தலா ஒரு புள்ளி எடுத்து இறுதி மூன்றாவது இருபது ஓவர் மேட்ச் அபுதாபி சகாமா மைதானத்தில் கடந்த அக்-25 ந்தேதி நடைபெற்றது.

முதலில் எம்.எம்.சி சி அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தன மேலும் எம்.எம்.சி சி அணியின் சார்பாக கார்த்திக் அதிகபட்சமாக 27 ரன்களும் மற்றும் சாந்து செய்யது 24 ரன்களும் எடுத்தார்கள்.

மேலும் இ .டி .ஏ மெல்கோ அணியின் சார்பாக பௌலர் ராஜ்கபூர் மற்றும் உதுமான் தலா இரண்டு விக்கெட் எடுத்தார்கள் மேலும் பின்பு ஆடிய இ .டி .ஏ மெல்கோ அணி 15 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்து கோப்பையினை தட்டிச்சென்றது மேலும் இ .டி .ஏ மெல்கோ அணியின் சார்பாக அதிகபட்சமாக கான் 52 ரன்களும் ரிபாய்தீன் 14 ரன்களும் எடுத்தார்கள் எம்.எம்.சி சி அணியின் சார்பாக தப்ரே ஆழம் , இபுறாஹிம் , சாம் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

மேலும் இந்த டௌர்ன்மெண்ட்க்கு கோப்பை ஸ்பான்சார் செய்யத முஹம்மது ஹசன் மற்றும் யாஷ்யா மக்தூம் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக லாபிர் , மற்றும் கார்த்திக் பங்கு கொண்டார்கள் மேலும் இந்த போட்டியை சிறப்பாக நடத்தி தந்த பி.எஸ்.காஜா முஹைதீன் , தப்ரே ஆலம் மற்றும் சாந்து செய்யதுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.