.

Pages

Monday, October 31, 2016

அபுதாபியில் சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டுவோருக்கு பரிசு கூப்பன்கள் !

அதிரை நியூஸ்: அபுதாபி, அக்-31
அபுதாபி போக்குவரத்து காவல்துறையினர் Happiness Patrol Project எனும் மகிழ்ச்சியான ரோந்து திட்டம் என்ற புதிய போலீஸ் பிரிவை துவக்கியுள்ளனர். இந்தத் திட்டத்திற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ரோந்து வாகனத்தில் வரும் போலீஸார் உங்களை இடைமறித்து நிறுத்தினால் அதிகபட்சம் உங்களுக்கு ஆச்சரிய பரிசு கூப்பன் தருவதற்காகவே இருக்கும் என்றாலும் சிலவேளை சாலை விதிகளை மீறுவோரையும் இவர்கள் நிறுத்தி அபராத கூப்பனையும் தர அதிகாரம் பெற்றவர்கள் என்பதையும் மறக்க வேண்டாம்.

நீங்கள் சாலை விதிகளை மதித்து வாகனத்தை கவனமாக ஓட்டுகின்றீர்களா என்பதை உன்னிப்பாக கவனிக்கும் இந்த போலீஸ் பிரிவினர் தரும் சுமார் 300 திர்ஹம் பெறுமானமுள்ள பரிசுக் கூப்பன்களை பிரபல மால்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பரிசுப் பொருட்களாக பெற்றுக் கொள்ளலாம் அதேவேளை சிறிய அளவில் சாலை விதிகளை மீறினால் அன்புடன் கண்டித்து அல்லது கால்பந்து விளையாட்டில் உள்ளது போல் மஞ்சள் அட்டையை வழங்கி எச்சரித்து அனுப்புவர்.

இந்த திட்டத்தின் கீழ் வாகன ஓட்டுனர்கள், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வாகனப் பயணிகள் மற்றும் பாதசாரிகளும் கண்காணிக்கப்படுவர்.

இன்டிகேட்டர் போடாமல் லேன் மாறுவோர், தவறாக பார்க்கிங் செய்வோர், வாகன அனுமதியை புதுப்பிக்காதவர்கள், ஓட்டுனர் அனுமதியை புதுப்பிக்காதவர்கள், இரவில் முன்விளக்கை எரிய விடாதோர், அனுமதிக்கப்படாத இடத்தில் ரோட்டின் குறுக்கே நடந்து செல்வோர் என 27 வகையான சிறு குற்றங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அட்டை கட்டாயம் வழங்கப்படும்.

அதேவேளை பெருங்குற்றங்களான அதிக வேகம், போதையில் ஓட்டுதல் போன்ற குற்றங்களுக்குரிய அபராதம் மற்றும் தண்டனைகளையும் தர வல்லவர்கள் இந்த போலீஸார் என்றாலும் இவர்களுடைய நோக்கம் சாலை விதிகளை மதிக்கும் உங்கள் முகங்களில் புன்னகையை மட்டுமே.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.