.

Pages

Thursday, October 20, 2016

அதிரையில் தொலைத்தொடர்பு கேபிள் துண்டிப்பால் பொதுமக்கள் அவதி!

அதிராம்பட்டினம், அக்-20
தஞ்சை மாவட்டம் பேராவூரணி, பெருமகளூர், அதிரை ஆகிய பேரூராட்சிகள், பட்டுக்கோட்டை சேதுபாவா சத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பாபநாசம், திருவையாறு ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,153 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க இருப்பதையொட்டி, கூட்டு குடிநீர் திட்டத்தின் இறுதி கட்ட பணிகள் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தப்பணிக்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போது பிஎஸ்என்எல் தொலைதொடர்பு கேபிள்கள் 7 இடங்களில் துண்டிக்கப்பட்டன. இதனால் இந்த கேபிள் வழியே செல்லும் 100 க்கும் அதிகமான பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு இணைப்புகள் கடந்த சனிக்கிழமை முதல் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் அவதியுற்றனர். இதையடுத்து இப்பகுதியினர் அளித்த புகாரை அடுத்து பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் துண்டித்த கேபிள்களை கண்டறிந்து இணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு தினங்களில் இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.