விளை நிலத்தை வீட்டு மனையாக பத்திரப்பதிவு செய்ய விதி்க்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தடையை நீக்க மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவை முழுமையாக தடை செய்ய்யவில்லை என்றும், அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மனைகளை அங்கீகரிப்பது தொடர்பாக திட்டம் வகுக்கவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் விளைநிலங்களை வீட்டு மனையாக மாற்றும் விவகாரத்தில் அரசின் கொள்கை என்ன என்று வினவியுள்ள நீதிமன்றம், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் அரசு தரப்பு கோரிக்கைகளை நிராகரித்தது. முன்னதாக அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. தடையை நீக்க கூடாது என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வாதிட்டார். விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக வாதிட்டார். ஆனால் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனையை பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு அரசு தரப்பு வாதிட்டது. பத்திரப்பதிவு தடையால் கோடிக்கணக்கில் முதலீடு பாதிக்கப்பட்டுள்ளதாக ரியல் எஸ்டேட் தரப்பு வாதிட்டது. கடத்தல் மூலம் பல கோடி கிடைக்கும். அதற்காக கடத்தலை அனுமதிக்க முடியுமா என நீதிபதி வினவினார். இறுதியில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை மாற்றியமைக்க முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் வழக்கு விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் விளைநிலங்களை வீட்டு மனையாக மாற்றும் விவகாரத்தில் அரசின் கொள்கை என்ன என்று வினவியுள்ள நீதிமன்றம், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் அரசு தரப்பு கோரிக்கைகளை நிராகரித்தது. முன்னதாக அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. தடையை நீக்க கூடாது என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வாதிட்டார். விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக வாதிட்டார். ஆனால் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனையை பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு அரசு தரப்பு வாதிட்டது. பத்திரப்பதிவு தடையால் கோடிக்கணக்கில் முதலீடு பாதிக்கப்பட்டுள்ளதாக ரியல் எஸ்டேட் தரப்பு வாதிட்டது. கடத்தல் மூலம் பல கோடி கிடைக்கும். அதற்காக கடத்தலை அனுமதிக்க முடியுமா என நீதிபதி வினவினார். இறுதியில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை மாற்றியமைக்க முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் வழக்கு விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.