அதிரை நியூஸ்: சவூதி அரேபியா, அக்-18
நெஞ்சும் வயிற்றுப் பகுதியும் ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சவுதி அரேபியா ரியாத் நகரின் கிங் அப்துல் அஜீஸ் மெடிக்கல் சிட்டியினுள் அமைந்துள்ள கிங் அப்துல்லா குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையில் டாக்டர் அப்துல்லாஹ் அல் ரபீயா அவர்கள் தலைமையிலான குழுவினரால் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் 34 வார குறை பிரசவத்தில் 3.6 கிலோ எடையுடன் சிசேரியன் மூலம் பிறந்த பச்சிளம் பாலகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 5 மணி நேரத்தில் பிரித்தெடுக்கப்பட்ட இந்நிகழ்வின் போது 'ஐலான்' என்ற குழந்தை 80 சதவிகிதம் உயிர் பிழைப்பது கடினம் என்ற நிலையில் இருந்ததும் 'ஐலீன்' என்ற குழந்தை மட்டுமே அறுவை சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைக்கும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
சவுதியில் 1990 ஆம் ஆண்டு முதல் இதுவரை 41 ஒட்டிப் பிறந்த 18 சர்வதேச நாட்டு குழந்தைகளையும் பிரித்தெடுக்கும் ஆபரேசன்கள் நடந்துள்ளன, இதில் 32 ஆபரேசன்கள் வெற்றியடைந்துள்ளன. 94 குழந்தைகளுக்கு ஆபரேசன் இல்லாத மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளை பிரித்தெடுப்பதற்கு ஆகும் மொத்த செலவுகளையும் சவுதி மன்னர்களின் உத்தரவின் பேரில் சவுதி அரசே ஏற்றுக் கொள்கிறது.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
நெஞ்சும் வயிற்றுப் பகுதியும் ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சவுதி அரேபியா ரியாத் நகரின் கிங் அப்துல் அஜீஸ் மெடிக்கல் சிட்டியினுள் அமைந்துள்ள கிங் அப்துல்லா குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையில் டாக்டர் அப்துல்லாஹ் அல் ரபீயா அவர்கள் தலைமையிலான குழுவினரால் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் 34 வார குறை பிரசவத்தில் 3.6 கிலோ எடையுடன் சிசேரியன் மூலம் பிறந்த பச்சிளம் பாலகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 5 மணி நேரத்தில் பிரித்தெடுக்கப்பட்ட இந்நிகழ்வின் போது 'ஐலான்' என்ற குழந்தை 80 சதவிகிதம் உயிர் பிழைப்பது கடினம் என்ற நிலையில் இருந்ததும் 'ஐலீன்' என்ற குழந்தை மட்டுமே அறுவை சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைக்கும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
சவுதியில் 1990 ஆம் ஆண்டு முதல் இதுவரை 41 ஒட்டிப் பிறந்த 18 சர்வதேச நாட்டு குழந்தைகளையும் பிரித்தெடுக்கும் ஆபரேசன்கள் நடந்துள்ளன, இதில் 32 ஆபரேசன்கள் வெற்றியடைந்துள்ளன. 94 குழந்தைகளுக்கு ஆபரேசன் இல்லாத மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளை பிரித்தெடுப்பதற்கு ஆகும் மொத்த செலவுகளையும் சவுதி மன்னர்களின் உத்தரவின் பேரில் சவுதி அரசே ஏற்றுக் கொள்கிறது.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.