அதிரை நியூஸ்: துபாய், அக்-23
துபாய் சாலை போக்குவரத்து தாமதங்களை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட மெட்ரோ தற்போது பரபரப்பான நேரங்களில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூட வழியில்லாத நிலையில் பயணிகளால் நிரம்பி வழிகிறது. அதாவது நம்ம நாட்டுப்புற மொழியில் சொல்வதென்றால் 'அலி ஊருக்கு பயந்து புலி ஊருக்கு போன அலி ஊரும் புலி ஊரா மாறிடுச்சாம்' என்கிற கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது.
பரபரப்பான காலை மற்றும் மாலை நேரங்களில் (Peak Hours), குறிப்பாக காலையில் வேலைக்கு செல்லும் நேரத்திலும் பின்பு மாலையில் வீடு திரும்பும் நேரத்திலும் பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக 276 கூடுதல் குறுகிய தூர பயணங்களுக்கான சேவைகள் (Cut Route Services) இன்று (ஞாயிறு 23.10.2016) முதல் துவங்குகின்றன.
ரெட் லைனில் துபை இன்டர்நெட் சிட்டி (Internet City) மற்றும் ஜாஃபிலியா (Jaffiliya) நிலையங்களிலிருந்து ராஷிதியாவிற்கும் (Rashidiya) மற்றும் பர்ஜூமானிலிருந்து (Bur Juman) ஜெபல் அலிக்கும் (Jabal Ali) இடையில் வாரத்தில் 5 நாட்கள் அதாவது ஞாயிறு முதல் வியாழன் வரை இச்சிறப்பு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்
துபாய் சாலை போக்குவரத்து தாமதங்களை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட மெட்ரோ தற்போது பரபரப்பான நேரங்களில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூட வழியில்லாத நிலையில் பயணிகளால் நிரம்பி வழிகிறது. அதாவது நம்ம நாட்டுப்புற மொழியில் சொல்வதென்றால் 'அலி ஊருக்கு பயந்து புலி ஊருக்கு போன அலி ஊரும் புலி ஊரா மாறிடுச்சாம்' என்கிற கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது.
பரபரப்பான காலை மற்றும் மாலை நேரங்களில் (Peak Hours), குறிப்பாக காலையில் வேலைக்கு செல்லும் நேரத்திலும் பின்பு மாலையில் வீடு திரும்பும் நேரத்திலும் பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக 276 கூடுதல் குறுகிய தூர பயணங்களுக்கான சேவைகள் (Cut Route Services) இன்று (ஞாயிறு 23.10.2016) முதல் துவங்குகின்றன.
ரெட் லைனில் துபை இன்டர்நெட் சிட்டி (Internet City) மற்றும் ஜாஃபிலியா (Jaffiliya) நிலையங்களிலிருந்து ராஷிதியாவிற்கும் (Rashidiya) மற்றும் பர்ஜூமானிலிருந்து (Bur Juman) ஜெபல் அலிக்கும் (Jabal Ali) இடையில் வாரத்தில் 5 நாட்கள் அதாவது ஞாயிறு முதல் வியாழன் வரை இச்சிறப்பு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.