.

Pages

Friday, October 21, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் இந்திய ஆங்கில இலக்கிய சிறப்பு கருத்தரங்கம் ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி ஆங்கிலம் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் இந்திய ஆங்கில இலக்கிய சிறப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் ஏ. முகம்மது முகைதீன் அறிமுக உரை நிகழ்த்தி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் கே. கவியரசு கலந்துகொண்டு பேசுகையில், 'ஆங்கிலயர்கள் இந்தியாவில் காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்திய பிறகு இந்திய ஆங்கில இலக்கியம் உருவானது. பின்னர் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 'போஸ்ட் காலனியல் லிட்ரேச்சர்' உருவானது. ஆங்கில இலக்கியத்திற்கு இந்தியாவில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இலக்கியவாதிகள் பெரும் பங்களிப்பாற்றி உள்ளனர்' என்றார்.

நிகழ்ச்சிகளை கல்லூரி பேராசிரியர் ஆர். கோபிநாத் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் கல்லூரி பேராசிரியை தஸ்லீமா நன்றி கூறினார். இக்கருத்தரங்கில் கல்லூரி ஆங்கிலப்பாடப்பிரிவு மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.