தஞ்சாவூர் மாவட்டத்தில் உதவி பேராசிரியர் பணிக்கான
போட்டி எழுத்துத் தேர்வு மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர்ஆ.அண்ணாதுரை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் தெரிவித்ததாவது:
இத்தேர்வில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டங்களை சார்ந்த 1706 ஆண் தேர்வர்களும், 1812 பெண் தேர்வர்களும் மொத்தம் 3518 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வுப் பணியில் மேல்நிலைப் பள்ளித் தலைமையரிசிரியர் நிலையில் 24 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், துறை அலுவலர்கள் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாக 16 முதுநிலை ஆசிரியர்களும், 197 தேர்வுக் கூட அறைக் கண்காணிப்பாளர்களும் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் நிலையில் 56 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்ப்டு மொத்தம் 293 ஆசிரியர்கள் 40 அலுவலகப் பணியாளர்கள் இத்தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தேர்வு எழுத 3518 விண்ணப்பித்தவர்களில் 2063 தேர்வர்கள் தேர்வு எழுத வருகை புரிந்தனர். 1455 தேர்வர்கள் தேர்வு எழுதவரவில்லை.
தேர்வர்களின் பாதுகாப்பு மற்றும் தேர்வர்களை சோதனை செய்து தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கும் பணியில் காவல் துறையினை சார்ந்த 64 காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தேர்வர்கள் சிரமமின்றி வருகை தர தஞ்சாவூர், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களிலிருந்து அரசு சிறப்பு பேருந்துகளும், தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சார வசதியும் செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் வருவாய்த் துறை சார்ந்த அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
தேர்வர்கள் எவரும் செல்போன், ஐபேட், கால்குலேட்டர், டேபிளேட் மற்றும் அதிநவீன மின்னணு சாதனங்கள் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
அப்போது முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். திருவளர்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
போட்டி எழுத்துத் தேர்வு மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர்ஆ.அண்ணாதுரை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் தெரிவித்ததாவது:
இத்தேர்வில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டங்களை சார்ந்த 1706 ஆண் தேர்வர்களும், 1812 பெண் தேர்வர்களும் மொத்தம் 3518 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வுப் பணியில் மேல்நிலைப் பள்ளித் தலைமையரிசிரியர் நிலையில் 24 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், துறை அலுவலர்கள் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாக 16 முதுநிலை ஆசிரியர்களும், 197 தேர்வுக் கூட அறைக் கண்காணிப்பாளர்களும் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் நிலையில் 56 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்ப்டு மொத்தம் 293 ஆசிரியர்கள் 40 அலுவலகப் பணியாளர்கள் இத்தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தேர்வு எழுத 3518 விண்ணப்பித்தவர்களில் 2063 தேர்வர்கள் தேர்வு எழுத வருகை புரிந்தனர். 1455 தேர்வர்கள் தேர்வு எழுதவரவில்லை.
தேர்வர்களின் பாதுகாப்பு மற்றும் தேர்வர்களை சோதனை செய்து தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கும் பணியில் காவல் துறையினை சார்ந்த 64 காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தேர்வர்கள் சிரமமின்றி வருகை தர தஞ்சாவூர், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களிலிருந்து அரசு சிறப்பு பேருந்துகளும், தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சார வசதியும் செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் வருவாய்த் துறை சார்ந்த அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
தேர்வர்கள் எவரும் செல்போன், ஐபேட், கால்குலேட்டர், டேபிளேட் மற்றும் அதிநவீன மின்னணு சாதனங்கள் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
அப்போது முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். திருவளர்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.