.

Pages

Monday, October 31, 2016

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி வாரம் அக்டோபர் 31ம் முதல் நவம்பர் 5ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தபடுவதையொட்டி
அனைத்துத் துறை அலுவலர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் இன்று (31.10.2016) உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்திய நாட்டின் பொதுப் பணியாளர்களாகிய நாம், நமது நடவடிக்கைகள் சார்ந்த எல்லாத் துறைகளிலும் நேர்மையும் ஒளிவு மறைவற்ற தன்மையும் இடம் பெறுவதற்கு, தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்று இதனால் உளமார உறுதி கூறுவோம்.

ஊழலை அறவே ஒழித்திட நாம் வாழ்வில் இடையறாது முயல்வோம் எனவும் உறுதி கூறுவோம்.

நாம் விழிப்புடன் நமது அமைப்பின் முன்னேற்றம் மற்றும் நற்பெயருக்காக பணியாற்றுவோம்.

ஒன்றுபட்டு நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வாயிலாக, நமது அரசுக்குப் பெருமை சேர்ப்பதுடன் நமது நாட்டு மக்களுக்கு உயர்நெறிகளின் அடிப்படையிலான சேவைகள் புரிவோம்.

எவ்வித அச்சமும், தயவுமின்றி நம் மனசாட்சி காட்டும் நெறியின்படி நமது கடமையை ஆற்றுவோம்.

இந்த உறுதிமொழியில் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேரகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம்,  மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கணேசன் அலுவலக மேலாளர் (பொது) கார்த்திகேயன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்), சுபாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் கங்காதரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.