.

Pages

Sunday, October 30, 2016

பட்டுக்கோட்டையில் டீக்கடை ஊழியர் வெட்டிக்கொலை !

பட்டுக்கோட்டை, அக். 30
பட்டுக்கோட்டை கோட்டை சிவன்கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் சந்தோஷ்குமார் (20). பட்டுக்கோட்டை அண்ணா சிலை அருகிலுள்ள டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவர் சனிக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் பெருமாள் கோயில் தெருவிலுள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்தச் சென்றுள்ளார். அதே நேரம் வெட்டிக்காடு தங்கையன் மகன் மன்னாரு (எ) அருண்செல்வன் அவரது நண்பர்களுடன் மது அருந்த அங்கு வந்துள்ளார்.

அப்போது சந்தோஷ்குமார் நண்பர்கள் முகேஷ், மகேந்திரன் ஆகியோரிடம் மன்னாரு தகராறு செய்து அவர்களைத் தாக்கினாராம். இதைத் தட்டிக் கேட்ட சந்தோஷ்குமாரை மன்னாரு கோஷ்டியினர் அரிவாளுடன் விரட்டிச் சென்றனராம்.

அவர்களுக்குப் பயந்து லெட்சத்தோப்பு பகுதியிலுள்ள கருவேலமரக் காட்டுக்குள் ஓடிய சந்தோஷ்குமாரை மன்னாரு கோஷ்டியினர் தடுத்து நிறுத்தி அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பினராம்.

இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

இதுகுறித்து சந்தோஷ்குமார் தாயார் விஜயகுமாரி அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸார் கொலை வழக்குப் பதிந்து பட்டுக்கோட்டை மேலத்தெருவைச் சேர்ந்த அஜீத் (18) என்பவரை கைது செய்தனர்.

தலைமறைவான அருண்செல்வன் (எ) மன்னாரு, பிரகாஷ், செம்புமணி, பாண்டுமணி, ஆர். அருண் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.