.

Pages

Monday, October 24, 2016

ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவின் அனுமதி பெற்று உள்ளுர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய அறிவுறுத்தல் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு அறையில் அமைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, பார்வையிட்டார்.

ஊடக கண்காணிப்பு  அறையினை பார்வையிட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது :  தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் விளம்பரங்கள் தொடர்பாக உள்ளுர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட விளம்பரதாரர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவினரிடம் விண்ணப்பித்து அனுமதி சான்றிதழ்கள் பெற வேண்டும்.  ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவின் சான்றிதழ்; பெறாமல் தேர்தல் தொடர்பாக வேட்பாளர் சார்பாக ஒளிப்பரப்புதல் கூடாது. எனவே உரிய விண்ணப்பத்தில், மாவட்ட ஊடக சான்றிதழ் கண்காணிப்பு குழுவிடம் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்.

முன்னதாக ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு அறையினை பார்வையிட்டு கண்காணிப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிகளில் உள்ளுர் தொலைக்காட்சியில் தேர்தல் விளம்பரங்கள் கண்காணிக்கப்படும் முறை குறித்தும் கேட்டறிந்தார். பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு ஆகிய குழுக்களுக்கு வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு அவர்களின் வாகனங்கள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுவதையும், அவை தற்போது செயல்படும் இடம் குறித்தும் கேட்டறிந்தார்.

இவ்வாய்வின் போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் போ.சுருளிபிரபு, கு.சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.