.

Pages

Wednesday, October 26, 2016

அதிரையில் பட்டாசு விற்பனை கடைகளில் போலீசார் திடீர் சோதனை !

அதிராம்பட்டினம், அக்-26
எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு வெடி விபத்து இல்லாமல் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை. போக்குவரத்து துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் உள்ளாட்சித்துறையில் பணி புரியும் அனைத்து களப்பணியாளர்கள் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் தங்களுடைய அதிகார வரம்பிற்குட்பட்ட நெறிமுறைகளின்படி கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை கேட்டுக்கொண்டார். இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பட்டாசு தயாரிப்பு நிலையங்கள் மற்றும் விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொள்ள 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று புதன்கிழமை இரவு அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் கடைத்தெரு பகுதிகளில் உள்ள 4 பட்டாசு விற்பனை கடைகளில் பட்டுக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்மேனன் தலைமையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வெடி பொருள் சட்டத்தின் கீழ் பட்டாசு கடை உரிமைதாரர்கள் உரிமம் பெற்றுள்ளனரா ?, கடைகளில் உரிய பாதுகாப்பு முறைகளின் படி தீ தடுப்பு கருவிகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதா ?, கடைகளின் அருகில் மின்மாற்றிகள், தேநீர் விடுதிகள், நடமாடும் உணவகங்கள் உள்ளனவா ?, தடை செய்யப்பட்டுள்ள எரிவாயு விளக்குகள் பயன்படுத்தப்படுகிறதா ?, அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறதா ?, பட்டாசு விற்படை கடை உரிமத்தில் கூறப்பட்டுள்ள அதே இடத்தில் கடை அமைந்துள்ளதா ? போன்ற சோதனை மேற்கொள்ளப்பட்டன.  இதில் அதிக ஒலி எழுப்பக்கூடிய நாட்டு வெடி பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.