வெள்ளியன்று நள்ளிரவு ஷியா ஹவுத்தி தீவிரவாதிகள் புனித கஃபத்துல்லாவை நோக்கி ஏவிய வல்கனோ-1 ரக ஏவுகணையை சவுதி ராணுவம் புனித மக்காவிற்கு சுமார் 65 கி.மீ.க்கு முன்பாக வானில் எதிர்கொண்டு அழித்தொழித்தது.
இஸ்லாமியப் எதிர்ப்பாளர்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் கைகோர்த்து செயல்படும் ஈரானிய ஷியா அரசாங்கம் ஏமன் நாட்டில் நிலவிய அரசியல் ஸ்திரமின்மையை பயன்படுத்திக் கொண்டு ஏமன் வாழ் ஷியாக்களான ஹவுத்தி தீவிரவாதிகளை களமிறக்கி ஏமனை கைப்பற்றியது.
ஹவுத்திகளின் ஏமன் ஆக்கிரமிப்பை தொடர்ந்து சவுதி அரேபியா தலைமையில் களமிறங்கிய அரபு நாடுகளின் கூட்டுப்படைகள் ஹவுத்தி ஷியாக்களை ஓட ஒட விரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மாத ஆரம்பத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற அமீரக நிவாரண கப்பலை தாக்கியும், அமெரிக்காவின் ஒரு போர்க்கப்பலை தாக்கியும் உலகின் கடும் கண்டனங்களுக்கு உள்ளான ஹவுத்தி ஷியா தீவிரவாதிகள் தற்போது உலக முஸ்லீம்களின் புனிதத்தலமான புனித மக்கா நகரை தாக்கத் துணிந்துள்ளனர். உலகின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக ஜெட்டா விமான நிலையத்தை நோக்கியே ஏவுகணை வீசியதாக திசை திருப்பும் செயலிலும் இறங்கியுள்ளனர்.
ஹவுத்தி ஷியா பயங்கரவாதிகளின் இந்த கோழை செயலுக்காக உலகெங்கிலுமிருந்து கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ள நிலையில் அமீரகமும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் இப்பயங்கரவாதிகளை முறியடிக்க முஸ்லீம் நாடுகள் கைகோர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.