ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தமிழக உணவுத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நவம்பர் 1ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் உணவு பொருட்கள் வழங்கப்படாது என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது.
இதனால், ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கும் விவகாரம் குறித்து தமிழக உணவுத் துறை சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும். ஆனால், இதற்காக காலக்கெடு எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் அட்டை வடிவிலான ரேஷன் கார்டுக்கு ஆதார் எண் அவசியம் என்பதால், பொதுமக்கள், தாங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி:தினமணி
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நவம்பர் 1ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் உணவு பொருட்கள் வழங்கப்படாது என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது.
இதனால், ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கும் விவகாரம் குறித்து தமிழக உணவுத் துறை சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும். ஆனால், இதற்காக காலக்கெடு எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் அட்டை வடிவிலான ரேஷன் கார்டுக்கு ஆதார் எண் அவசியம் என்பதால், பொதுமக்கள், தாங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி:தினமணி
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.