.

Pages

Monday, October 24, 2016

சவுதியில் தொழிலாளர்களுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பு !

அதிரை நியூஸ்: சவூதி அரேபியா, அக்-24
சவுதியில் நீண்டகாலமாக எதிர்பாக்கப்பட்ட தொழிலாளர்களின் நலன்களுக்காக சிறப்பு தனி நீதிமன்றங்கள் இந்த வருட இறுதிக்குள் ஜெத்தா, ரியாத், தம்மாம், மக்கா மற்றும் மதினா ஆகிய இடங்களில் அமையவுள்ளதாக நீதித்துறை அமைச்சர் வலீத் அல் சமானி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஜூடிசியல் கவுன்சில் நீதிமன்றங்களே தொழிலாளர் சம்பந்தப்பட்ட விவகாரங்களை கையாண்டு வந்த நிலையில் இனி தனி நீதிமன்ற நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள். இதற்காக சுமார் 99 துணை நிலை நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டு தொழிலாளர்களுக்கான வழக்குகளை கையாளுவதற்கான சிறப்பு பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இவர்களிலிருந்து 80 நீதிபதிகள் உடனடியாக இந்த நீதிமன்றங்களில் பொறுப்பேற்கவுள்ளனர்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.