.

Pages

Monday, October 31, 2016

நிவாரண உதவிகளைக் கொண்டு செல்ல டிரைவரில்லா வாகனம் அறிமுகம் !

அதிரை நியூஸ்: அக்-31
பனிமலை, பாலைமணல், சதுப்பு நிலம், பாறை பகுதிகள் போன்ற எளிதில் பிற வாகனங்கள் பயணிக்க இயலாத நிலையிலும், போர், இயற்கை சீற்றம், போன்ற பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள், போர்முனையில் உள்ள வீரர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் சாலை வசதிகள் இல்லாப்பகுதிகளில் பயணிக்கும் வாகனங்களை முன்னிற்று வழிகாட்டி அழைத்துச் செல்லும் பைலட் வாகனம் என பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த புதிய வகை ஆளில்லா வாகனங்கள் வடிவமைக்கப்படவுள்ளன.

ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படவுள்ள இந்த டிரைவரில்லா வாகனங்களை அமீரகத்தின் மஸ்தார் அறிவியல் தொழிற்நுட்ப நிறுவனம் இங்கிலாந்து மற்றும் சுவிஸ் நிறுவனங்களுடன் இணைந்து இத்தகைய புதிய வகை ஆளில்லா வாகனங்களை அமீரகத்திலேயே தயாரிக்க ஓப்பந்தம் செய்துள்ளன.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.